டெல்லியில் விவசாயிகள் நிர்வாண போராட்டத்தை தொடங்கி வைத்ததே கன்னடராம்- கொச்சைப்படுத்தும் பொன்.ராதா!
டெல்லியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர்தான் விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்தை தொடங்கி வைத்ததாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.
நாகர்கோவில்: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டத்தை படுகேவலமாக கொச்சைபடுத்தியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நிர்வாணப் போராட்டத்தை கன்னடர் ஒருவரே தொடங்கி வைத்ததாக கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகம் அருகே விவசாயிகள் நிர்வாண போராட்டத்தை நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

5 முறை சந்தித்தேன்
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நான் 5 முறை அவர்களை சந்தித்தேன்.

அமைச்சர்களுடன் சந்திப்பு
அப்போது விவசாயிகள் நலனுக்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்தேன். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, மத்திய விவசாயத்துறை அமைச்சரை 2 முறையும், நிதி அமைச்சரை 3 முறையும் சந்தித்து இருக்கிறார்.

நிர்வாண போராட்டம்
இந்த போராட்டத்தை அவர்கள் ஏன் தமிழகத்தில் நடத்தவில்லை? பிரதமர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும்போது விவசாயி ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்தி இருக்கிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர்
முதலில் நிர்வாணமாக நின்றவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அதன் பின்னணி என்பது பற்றி தெரிய வேண்டும். மேலும் இந்த நிர்வாண போராட்டத்தை அய்யாக்கண்ணு ஏன் தடுக்கவில்லை?

மாநில அரசின் கடமை
உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதில் மத்திய அரசின் நிதி எதுவும் இல்லை. அதுபோல தமிழக அரசு ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. அதுகுறித்து யாரும் குறை கூறுவதில்லை.

100 போராட்டங்கள்...
டெல்லியில் ஒரு நாளைக்கு 100 போராட்டங்கள் நடைபெறும். அப்படி போராட்டம் நடத்துவோரையெல்லாம் பிரதமரால் சந்திக்க முடியுமா? விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டு வந்தால் பிரதமரை சந்திக்கலாம் என்றேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரதமரே சொன்னாலும் டெல்லியில் இருந்து போக மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications