ஆட்சி கவிழ்ப்பு வேணாம்... ஆட்டம் காட்டுவோம்... தினகரனின் மிரட்டல் பாலிட்டிக்ஸ்
நான் முன்னாள் முதல்வர்னா நீங்க முன்னாள் எம்எல்ஏ என்று பகிரங்கமாகவே ஈபிஎஸ் கூறி வருவதால் ஆட்சியை கவிழ்க்காமல் மிரட்டல் பாணி அரசியலை கையில் எடுத்துள்ளார் தினகரன்.
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க தினகரன் திட்டமிடாவிட்டாலும், ஆட்டம் காட்டும் மிரட்டல் வேலையை செய்து வருகிறார்.
ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமியும், ஆட்சி, கட்சி அதிகாரத்தை கைப்பற்ற டிடிவி தினகரனும் முட்டி மோதி வருகின்றனர்.
அதிமுகவில் அம்மா அணியின் அதிகார மோதல், தமிழக மக்களை எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது எப்படா முடிவுக்கு வரும் என்று எதிர்பாக்கத் தொடங்கியுள்ளனர்.

நல்லாதானே நடக்குது
கடந்த வாரம் தன்னை சந்திக்க வந்த தினகரன் ஆதரவாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே,

எல்லோரும் மாஜிதான்
நான் ஓபிஎஸ் மாதிரி இருக்கமாட்டேன்.. என்னை பதவியில் இருந்து இறக்க நினைச்சா நீங்கள் எல்லோரும்தான் பதவியை இழப்பீங்க.. நான் முன்னாள் முதல்வரானால் நீங்களும் மாஜி எம்.எல்.ஏ.க்களாகிடுவீங்க என்றும் எச்சரித்துள்ளார்.

ஆதரவாளர்களுக்கு பதவி
இதனையடுத்தே ஆட்சியை கவிழ்க்காமல் ஆட்டம் காட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன். முதலில் தனக்கு வேண்டிய நிர்வாகிகளை நியமித்தவர், இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். இது தொடரும் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அழிந்து போவார்கள்
இதனைத் தொடர்ந்தே எடப்பாடி பழனிச்சாமி தான் போகும் இடங்களில் எல்லாம் ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி நடக்கிறது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பேசி வருகிறார். துரோகிகளை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றம் பேசுகிறார் ஈபிஎஸ்.

மிரட்டல் பாலிட்டிக்ஸ்
எடப்பாடிக்கு ஒரு கண்ணு போனா, தினகரனுக்கு 2 கண்ணும் போகும் எனவே ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பே இருக்காது. ஆனால் எத்தனை காலத்துக்கு இந்த மிரட்டல் பாலிட்டிக்ஸ் தொடரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இவர்களின் அரசியலில் சிக்கி சின்னாபின்னமாவது என்னவோ தமிழக மக்கள்தான்.
-
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications