கிரானைட் ஊழலை அக்குவேறாக ஆணிவேறாக அம்பலப்படுத்தியதால் சகாயத்துக்கு கொலை மிரட்டல்!
கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தியதால் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் ஊழலை உரிய ஆதாரங்களுடன் மிக விரிவாகவே அம்பலப்படுத்திவிட்டார் என்ற கோபத்தால் சமூக விரோதிகள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரியாக சகாயம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை கிரானைட் குவாரிகளில் இரவு பகலாக ஆய்வு நடத்தினார் சகாயம்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் சுமார் 600 பக்க அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த பிரதான அம்சங்கள்:

600 பக்கம்
600 பக்கங்களில் 66 அத்தியாயங்களைக் கொண்டது இந்த அறிக்கை. இது 2015-ல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிதைந்த தொல்லியல் சின்னங்கள்
கிரானைட் கற்களுக்கான விவசாய நிலங்கள், நீர்நிலைகள், தொல்லியல் சின்னங்கள், கோயில்கள் சிதைக்கப்பட்டன. வீடுகள் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு கேட்டவர்களின் இடங்களையும் இந்த கும்பல் ஆக்கிரமித்தது.

அழிந்த கல்வெட்டுகள்
திருவாதவூர், கீழவளவு, சமணர்குகைகள், கல்படுக்கைகள் ஆகியவற்றுடன் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் வெட்டி நாசப்படுத்தியது கிரானைட் கும்பல். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனர்.

அதிகாரிகள் உடந்தை
இந்த கிரானைட் மோசடி கும்பலுக்கு அனைத்து மட்டத்திலும் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். துறைமுக அதிகாரிகள், கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த ஏற்றுமதி மோசடி அரங்கேறியது. வங்கிகளும் இந்த கும்பல்களுக்கு உடந்தையாகவே செயல்பட்டது என்கிறது சகாயம் அறிக்கை.

விரக்தியில் மிரட்டல்
இதனால்தான் கிரானைட் கும்பல் அதிர்ந்து போய் சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. தற்போது கொலை மிரட்டல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications