கண் முன்னே மனைவியை இழுத்துச் சென்ற வெள்ளம்- கதறும் முதியவர்!
தாம்பரம்: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவர் ஒருவர் கண்முன்னே மனைவியையும் வெள்ளம் அடித்துச் சென்றதைக் கண்டு கதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள பழைய பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ஜெபமாலை. இவருடைய மனைவி மேரிபுஷ்பம். இவர்கள் மகளுடன் பாரதி நகரில் வசித்து வந்தனர். கடந்த 1 ஆம் தேதி இவர்களின் மகள் வெளியில் சென்று இருந்தார். அப்போது பெய்த கனமழையின் போது ஜெபமாலையும், மேரிபுஷ்பமும் வீட்டில் இருந்தனர். இவர்கள் வீட்டை மழைவெள்ளம் சூழ்ந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் கணவன், மனைவி இருவரும் கட்டிலின் மேல் அமர்ந்து இருந்தனர். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிக அளவில் வீட்டுக்குள் புகுந்ததால் அந்த கட்டிலின் மேல் மற்றொரு கட்டிலை போட்டு மனைவியுடன் ஜெபமாலை மேலே ஏறி நின்றார். மழை வெள்ளத்தின் அளவு அதிகரித்து வீட்டை மூழ்கடிக்கும் நிலை வந்தது.
இதனால் ஒரு கையில் மின்விசிறியையும், மறு கையில் மனைவியையும் ஜெபமாலை பிடித்து கொண்டார். வெகுநேரமாக கழுத்து அளவுக்கு தண்ணீர் இருந்ததால் மேரிபுஷ்பம் சோர்ந்து போய் வெள்ளநீரில் விழுந்து தத்தளித்தார்.
கண் எதிரில் மனைவி தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து ஜெபமாலை கதறினார். ஆனால் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாததால் மேரிபுஷ்பம் தண்ணீரில் மூழ்கி இறந்தார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதபடி மின்விசிறியை பிடித்து கொண்டு 2 நாட்களாக ஜெபமாலை தண்ணீரில் சிக்கி தவித்தார்.
அதன் பின்னர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் ஜெபமாலையை படகில் அழைத்துச்சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வெள்ளத்தில் சிக்கிய மேரிபுஷ்பத்தின் உடலை 3 ஆம் தேதி கவுன்சிலர் புகழேந்தி, த.மு.மு.கவினர் மீட்டு வெளியில் எடுத்து வந்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications