முத்தமெல்லாம் நிறைய இருக்கு.. கொடுத்துக்கத்தான் சிட்டுக் குருவிகளைக் காணோம்...!
சென்னை: உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது.
அலாரம் சத்தத்திற்கு அரக்க பரக்க எழுந்திருக்காமல், ‘கீச்.. கீச்...' என்ற பறவைகளின் சத்தத்தால் கண் விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள். பறவைகள் மீது கொண்ட தீராக் காதலாலோ என்னவோ, குழந்தைகளுக்குக் கூட அவர்கள் அன்னம், மயில், சிட்டு எனப் பெயர் வைத்துக் கொண்டாடினார்கள்.

ஆனால், இன்று நகரங்களில் மட்டுமல்ல, சில கிராமங்களிலும் பறவைகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. அப்படித் தான் சிட்டுக் குருவில் உலகளவில் அழிந்து அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்து விட்டது.
சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். இவை பெரும்பாலும் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும்.
செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆனால், தொழிற்சாலைகள் அதிகரிப்பு, விளைநிலங்கள் வீட்டு மனைகளாக் கப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரை தேடுமிடங்கள் சுருங்கிவிட்டன. வயல்வெளிகளில் பயிர்களுக்கு ரசாயன தெளிப்பு அதிகரித்திருப்பதால், சிட்டுக்குருவிகள் முட்டை இட கூட்டைத் தேடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளது.
முன்பு உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் சிட்டுக்குருவிகள் அதிகளவில் இருந்தன. ஆனால், தற்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து, வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரத்திலோ தொங்க விட்டால் கூட சிட்டுக்குருவிகளுக்குப் போதுமானது என்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.
சிட்டுக்குருவி அழிவு குறித்து மக்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணகிரி அருகே சில கிராமங்களில் சிட்டுக்குருவி வளர்ப்பு முழுவீச்சில் செயல்படுத்தப் படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications