தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை பெயர்த்தெடுத்த மர்மநபர்கள்.. கடும் கோபத்துடன் எடப்பாடி பழனிச்சாமி வார்னிங்
தஞ்சை: தஞ்சையில் இரண்டு அடி உயரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மர்ம நபர்களால் பெயர்த்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு, தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. 4 அடி உயர பீடத்தில் இரண்டு அடியில் எம்ஜிஆர் சிலை இருந்தது.
இந்த நிலையில் அந்த சிலையை இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து நடைபாதையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகளும் எம்ஜிஆர் ரசிகர்களும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

எம்ஜிஆர் சிலை
தஞ்சை மாவட்டத்தின் அதிமுக பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு போய் பார்த்தனர். அப்போது சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகே நடைபாதையில் இருந்த தள்ளுவண்டியில் சிலை வீசப்பட்டிருந்தது. அதை கைப்பற்றினர்.

சிலை அகற்றம்
இதையடுத்து அந்த இடத்தில் மீண்டும் சிலையை அமைக்கும் முயற்சியில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலை எதற்காக அகற்றப்பட்டது? சிலையை அகற்றியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எம்ஜிஆர் சிலை சேதம்
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல். தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

எச்சரிக்கை
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக் கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications