"பிள்ளை மாதிரி பார்த்தோம்.. அரசியல் செய்கிறார்கள்.." தஞ்சாவூர் மாணவி பற்றி பள்ளி நிர்வாகம் விளக்கம்!
தஞ்சாவூர்: மாணவி மரணத்தை அரசியலுக்காக ஒருசில பிரிவினர் கையிலெடுத்து திசைதிருப்புவதாக பள்ளி நிர்வாகம் அறிக்கை தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ மத கல்வி நிறுவனம் ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகி துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக
இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, மாணவிக்கு நீதிகேட்டும் பாஜக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. இந்திய அளவில் அந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. மாணவியின் குடும்பத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது.

கைது
மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி நிர்வாகம்
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் இதற்கு விளக்கமளித்துள்ளது. ''மாணவி 8ம் வகுப்பு முதல் எங்கள் பள்ளியில்தான் பயின்றார்; எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே வளந்தார். அதனால்தான் 10ம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தார்.அவரது இறப்பு குறித்து பல வதந்திகள் பரவுகின்றன. மாணவி மரணத்தை அரசியலுக்காக ஒருசில பிரிவினர் கையிலெடுப்பதும், திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், எம்மீது அவதூறு பரப்புவதும் பல வழிகளில் தொடர்வது வருத்தமளிக்கிறது.

ஆதாரம் இல்லை
இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ள வேண்டும். எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை; மதமாற்ற நடவடிக்கை குற்றச்சாட்டிற்கு எம் நிறுவனங்களில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எங்கள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களே இதற்கு சாட்சி'' என்று பள்ளி நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications