சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா கோலாகலம்..கோமதி அம்மனை தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா?
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் ஆலயத்தில் ஆடித்தபசு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்த கோமதியம்மன் ஒன்றைக்காலில் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நாளாகும். ஆடித்தபசு நாளில் கோமதியம்மனை தரிசனம் செய்ய சங்கரன்கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Recommended Video
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது .
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா இன்று கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications