நானா பாஜகவின் பி டீம்.. கடும் பதிலடி கிடைக்கும்.. கமல் ஆவேசம்
பாஜகவோடு தன்னை ஒப்பிட்டு பேசுவது கெட்டவார்த்தை பேசுவதற்கு சமம் என்று பாஜகவை கிண்டல் செய்து நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Recommended Video
திருநெல்வேலி: பாஜகவோடு தன்னை ஒப்பிட்டு பேசுவது கெட்டவார்த்தை பேசுவதற்கு சமம் என்று பாஜகவை கிண்டல் செய்து நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நெல்லையில் நடந்த மக்கள் நீதியை மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் மிக நீண்ட நேரம் பேசினார். முக்கியமாக அரசியல் கட்சிகளை எல்லா கிண்டல் செய்து, தனது எதிர்ப்பை காட்டினார்.
இது ஒருக்கட்டத்தில் திராவிட கட்சிகளை மட்டுமில்லாமல், தேசிய கட்சியான பாஜகவையும் கிண்டல் செய்தார். பாஜகவுடன் தன்னை ஒப்பிடுவது கெட்டவார்த்தை பேசுவது போன்றது என்று கூறினார்.
தேசிய அரசியல்
கமல் தனது பேச்சில், நாம் பேசியது எல்லாம் போதும். சில வடநாட்டு வல்லுநர்கள் என்னிடம் தேசிய அரசியல் செய்ய சொல்கிறார்கள். விரைவில் தேசிய அரசியலும் நாம் செய்வோம். தமிழகம் முடிந்த பின் அதுதான்.
கூட்டணி போய்விடும்
தேர்தல் முடிந்த பின் பல கூட்டணிகள் காணாமல் போய்விடும். நீங்களே பொறுத்திருந்து பாருங்கள். எனக்கு நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது. சிலர் நான் செய்ததை பார்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.
கெட்டவார்த்தை பேச வேண்டாம்
என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள். என் மீது கோபம் கொண்டு என்னை பார்த்து கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். என்னை பார்த்து பாஜகவின் பீ டீம் என்று கெட்டவார்த்தை பேசுகிறார்கள்.
எனக்குத்தான் அவமானம்
என்னை பாஜகவின் பீ டீம் என்று சொல்லி அவமானப்படுத்த வேண்டாம். இது போன்ற கெட்டவார்த்தைகளை பேச வேண்டாம். அப்படி நீங்கள் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். நான் யாருடைய பீ டீமும் இல்லை, மக்களின் டீம்.
முடிவு
நாளை மட்டும் நமதல்ல: நாளை மறுநாளும் நமதே.நாம் டெல்லி என்ற தேர்தலை கடந்து செல்ல வேண்டும்.ஆனால் டெல்லியோடு என் பயணம் முடிந்துவிடாது.இது மனக்கோட்டை அல்ல: மக்கள் கோட்டை.மக்கள் நினைப்பதுதான் கோட்டை: அவர்கள் நாடுவதே கொடி: நன்றி, என்று குறிப்பிட்டார்.