"சிலர்" மருத்துவமனையில் இருந்தபோது அடிமட்ட தொண்டன்தான் ஆஸ்பத்திரியில் குவிந்தான்.. கமல் சூசகம்
Recommended Video

நெல்லை: சிலர் மருத்துவமனையில் இருந்தபோது அவர் சேர்த்து வைத்த பணம் வரவில்லை. ஒதுக்கி வைத்திருந்த தொண்டன்தான் மருத்துவமனையில் குவிந்தான் என கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்தார்.
நெல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் நாங்கள் பல அறிஞர்களிடம் பேசி வருகிறோம். கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம்.
மக்கள் விரும்பினால் கொள்கைகளை காட்டுவேன். ஆனால் இதற்கு முன் மக்கள் கொள்கையே பார்க்கவில்லை. என்னுடைய முக்கிய கொள்கை நேர்மைதான்: அது யாரிடமும் இல்லை.

மருத்துவமனை
நான் சரியாக வரிக்கட்டி வருகிறேன். சொத்து சேர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாகும் போது சொத்து கூட வராது. எத்தனை கோடி சேர்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் போது எதுவும் உதவாது.

தொண்டன்
நான் யாரையும் குறிப்பிடவில்லை. காசு சிலருக்கு மருத்துவமனையில் உதவியதா? சிலர் மருத்துவமனையில் இருந்த போது அடிமட்ட தொண்டன்தான் வந்தான்.

கேள்வி
அவர்களுக்கு அப்போது காசு உதவி செய்யவில்லை. கொள்ளை செய்யும் கூட்டமாக அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள். கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள். நம் பிள்ளையைதான் சுட்டார்கள்: நாம் மறக்க கூடாது.

அரசியல்வாதிகள்
மக்கள் நலனே எங்கள் குறிக்கோள். சாதி மறந்து எல்லோரும் ஒன்று சேர்வோம் வாருங்கள். இலவசம் கொடுப்பதற்காக மக்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளுகிறார்கள். அரசியவாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. வெட்கம் இருக்கிறதா? இல்லையா? பதில் சொல்லுங்கள் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications