நீராவி முருகனை பிடிக்க சென்றபோது படுகாயம்.. 4 போலீசார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.. என்ன நடந்தது?
கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய நீராவி முருகனை பல மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே என்கவுண்டர் செய்துள்ளனர்.
திருநெல்வேலி: ரவுடி நீராவி முருகன் தப்பிச்செல்லும் போது தாக்கியதில் காயமடைந்த நான்கு காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை, கொள்ளைகளை செய்த நீராவி முருகனை பல மாதங்களாக தேடி வந்த தனிப்படை காவல்துறையினர் சுட்டுக்கொன்றது எப்படி என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி நீராவி முருகன், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர். இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் குற்றவாளியாக இருந்தார். கொலை கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைவரிசை காட்டி வந்தார் நீராவி முருகன்.

கொலை, கொள்ளை வழக்குகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

இசக்கிராஜா தலைமையில் தனிப்படை
பல மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் இன்று நெல்லை வந்துள்ளனர்.

ரவுடி என்கவுண்டர்
நாங்குநேரிக்கு அவர்கள் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளார். மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த காவல்துறையினர்
ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர் சத்யராஜ், ஷேக் முபாரக், காங்கு மணி, ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காப்புக்காக நடந்த என்கவுண்டர்
செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன், திண்டுக்கல் மாவட்ட கொள்ளை வழக்கில் நீராவி முருகன் தேடப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் முருகனை இங்கு தேடி வந்துள்ளார். களக்காடு பகுதியில் அவரை சுற்றி வளைத்தபோது முருகன் காவலர்களை தாக்கியதால் தற்காப்பிற்காக இசக்கிராஜா அவரது கைதுப்பாக்கியினால் சுட்டதில் முருகன் உயிரிழந்தார் என்று கூறினார்

அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு
நீராவி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார் எஸ்.பி சரவணன். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் நீராவி முருகன். காவல்துறையினர் என்கவுண்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்த அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications