காமுக தலைமை ஆசிரியர்.. 11ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச சாட் தொல்லை! தட்டி தூக்கிய திசையன்விளை போலீஸ்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெரும் பள்ளி செயல்பட்டு வருகிறது. திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவியிடம் ஆபாச சாட்
அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் தவறான முறையில் பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது ஏராளமான மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் தவறான முறையில் பழக முயற்சி செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், தாய் தந்தையை இழந்த மாணவி ஒருவரின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக சாட் செய்து வந்துள்ளார் காமக்கொடூர தலைமை ஆசிரியர்.

தலைமை ஆசிரியரை பணி நீக்கம்
இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் இதுபற்றி உடன்டியாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர்.பள்ளி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுபற்றி திசையன்விளை காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

ஒரு வாரமாக தலைமறைவு
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமை ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார் .அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கபட்டது .கடந்த ஒரு வாரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

மடக்கிப்பிடித்த போலீஸ்
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், பதுங்கி இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான தலைமை ஆசிரியருக்கு மனைவி, 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications