"மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை.. குடைச்சல் கொடுக்கிறது" அமைச்சர் நாசர்!
திருவள்ளூர்: மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த கருத்தின் மூலம் தமிழகத்தில் பாஜக கால்பதிக்க தீவிரமாக பணியாற்றி வருவது தெரிகிறது.

பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இதனிடையே நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் குடும்ப அரசியல் செய்கின்றனா். பிரதமரைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறது. மத்திய அரசின் திட்டங்களில் பிரதமரின் படத்தைக்கூட இடம்பெறச் செய்வதில்லை. மத்திய அரசு தரமான அரிசியை வழங்குகிறது. ஆனால், தரமற்ற அரிசியை நியாயவிலைக் கடைகளில் மாநில அரசு விநியோகிக்கிறது என்று நேரடியாகவே விமர்சித்தார்.

திமுக கூட்டம்
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் போரக்ஸ் நகரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டார்.

அமைச்சர் நாசர் பேச்சு
இக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றி பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும். திருவள்ளூர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பதவிகள், தலைவரால் கிடைத்தது. நீங்கள் உழைக்க வேண்டும். எங்கள் காலம் முடிந்து விட்டது. நீங்கள் பதவிக்கு வர வேண்டும்.

மத்திய அரசு ஒத்துழைப்பில்லை
மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை. 15 மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான பணம் ஜிஎஸ்டியில் வரவில்லை. தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கஜானா காலியாக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சராக இருக்கும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது என்று தெரிவித்தார்.

திமுக vs பாஜக
மத்திய அமைச்சர்கள் தமிழக அரசு மீது நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக அமைக்கர்களும் மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் திமுக vs பாஜக என்று மாறி வருகிறது. இந்த மோதல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications