பஞ்சுமிட்டாயை பார்த்ததும் பச்சப்பிள்ளையாய் மாறிய அமைச்சர் நாசர்! ஊஞ்சல் விளையாடி குதூகலம்!
திருவள்ளூர்: பஞ்சுமிட்டாயை பார்த்ததும் பச்சப்பிள்ளையாக மாறி அதை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
இதுமட்டுமல்லாமல் பஞ்சுமிட்டாய் கடை அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.
அமைச்சர் நாசரை பொறுத்தவரை படபடவென கோபம் கொள்ளக் கூடியவர் என்றாலும் கோபம் தீர்ந்தவுடன் குழந்தையை போல் மாறிவிடுவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் நாசர், அங்கு ஒரு ரவுண்டு வந்தார். அப்போது ஊஞ்சலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த அவர், அருகில் சென்று ஊஞ்சல் ஆட்டி விட்டதுடன் பூங்கா எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். பிறகு தாமும் குழந்தைகளோடு குழந்தையாக ஊஞ்சலில் அமர்ந்து விளையாடத் தொடங்கிய அமைச்சர் நாசரை கண்டு கட்சியினர் வியந்தனர்.

பஞ்சுமிட்டாய் கடை
இதென்ன பிரமாதம் இன்னுமிருக்கே என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனத்திற்கேற்ப பூங்காவை விட்டு வெளியே வந்து கார் ஏறச் சென்ற அமைச்சர் நாசர் அங்கிருந்த பஞ்சுமிட்டாய் கடையை கண்டதும் அங்கு சென்றார். பஞ்சுமிட்டாய் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு தமது செலவில் போதும் போதும் என்கிற அளவுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்ததுடன் தாமும் பஞ்சுமிட்டாய் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

குழந்தையை போல்
மேலும், தன்னுடன் இருந்த கட்சிக்காரர்களிடம் பஞ்சுமிட்டாய் சாப்பிடுகிறார்களா எனக் கேட்ட அவர் அவர்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் நாசரை பொறுத்தவரை படபடவென கோபம் கொள்ளக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இவர் திடீரென குழந்தையை போல் மாறி ஊஞ்சல் விளையாடி பஞ்சுமிட்டாய் சாப்பிட்ட நிகழ்வு திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

முதல்வர் அறிவுரை
முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரைக்கு பிறகு பொதுவிடங்களில் அமைச்சர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மாறத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. நெகட்டிவ் விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் பாசிட்டிவ் நிகழ்வுகளில் மட்டுமே அமைச்சர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications