3 குழந்தைகளை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் குதித்த தாய்! திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே 3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் ஆற்றில் குதித்ததில், அந்த 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் தனது 3 குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். கூலித் தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும் நிலவரசு, குறளரசு, யாஷினி என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இதில் யாஷினி 7 மாத கைக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அமுதா தனது மூன்று குழந்தைகளோடு நேற்று பிற்பகல் தென் பெண்ணை ஆற்றுக்கு சென்றிருக்கிறார்.

ஆற்றில் குதித்து
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்த அமுதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மூன்று குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு திடீரென தென்பெண்ணை ஆற்றில் குதித்திருக்கிறார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அமுதாவையும் அவரது மூன்று பிள்ளைகளையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் அமுதா உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகள் உயிரிழப்பு
பிள்ளைகள் மூவரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு வாணாபுரம் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 3 பிள்ளைகளுடன் தாய் ஆற்றில் குதித்த நிகழ்வை தான் தேநீர் கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் அப்பகுதியில் பேசி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
அமுதா தனது 3 பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை முடிவை எடுத்ததற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வறுமையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே அமுதா தற்போது சுய நினைவின்றி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications