உயிரை குடித்த சிக்கன் பிரியாணி.. சோகமான வளைகாப்பு விழா..திருவாரூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி
திருவாரூர்: வளைகாப்பு விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் இதில் ஆறு பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள், 26. இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இவருக்கு 5ஆம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது. அதன்பின் நடந்த விருந்தில் 5 வகை கலவை சாதம் ஆகியவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டது.

வாந்தி மயக்கம்
இந்த நிலையில் இந்த விருந்தில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் ,24, சந்துரு 10, இளரா 62, செல்வகணபதி 25, பாலாஜி 22, ராஜமாணிக்கம் 60, கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் 24 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெட்டுப்போன உணவுகள்
பொது விருந்து விழாக்களில் பங்கேற்பவர்களுக்காக உணவு சமைப்பவர்கள் பலரது உயிரை கவனத்தில் கொண்டு சமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களை கொண்டு உணவு சமைத்தால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. அது தவிர விருந்துக்காக சீக்கிரமே சமைத்தாலும் உணவு கெட்டுபோக வாய்ப்பு உள்ளது. எனவே விருந்து பரிமாறும் முன்பாக உணவின் தரத்தை பரிசோதித்து சாப்பிட தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications