திருப்பதியில் ஜன.13ல் வைகுண்ட ஏகாதசி,14ல் துவாதசி - ஒரு மாதத்திற்கு இனி திருப்பாவை ஒலிக்கும்
திருமலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு திருப்பாவை ஒலிக்கும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2022ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 14ஆம் தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 11 முதல் 14ஆம் தேதி வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணைய தளம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது. எம். பி. சி. 34, கவுஸ்துபம் ஓய்வறை, டி.பி.சி. கவுண்ட்டர், ஏ.ஆர்.சி. கவுண்டர்களில் ஜனவரி மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்படமாட்டாது.
நன்கொடையாளர்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது. தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சந்நிதானம், கோவிந்தசாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும்.
நேரடியாக வரும் விஐபிகளுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும். சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து3.30மணிவரை சுப்ரபாதசேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதசேவை ரத்து செய்யப்படும். இந்த ஆண்டு தினமும் நடந்து வந்த சுப்ரபாதசேவை ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications