100 கோடி வாங்குனவங்களுக்கே வேலையில்லை! சிம்பு, எஸ்கே சும்மா இருக்காங்க! அதிரடியாகப் பேசிய பிரபலம்
திருப்பூர்: 100 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்கள் இன்று வேலை இன்றி வீட்டில் உள்ளார்கள் எனவும், சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணி இன்றி வீட்டில் உள்ளனர். காரணம் அப்படி சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக இல்லை.
இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் தான். 8 வாரம் கழித்து தான் ஓடிடி வெளியீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதன் பாதிப்பு இன்று தெரிகிறது. எந்த நடிகருடைய படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால் பல தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்து விட்டது. ஏ.வி.எம் போன்ற நிறுவனங்கள் இன்று சொந்த படம் எடுக்க விரும்புவதில்லை. தென்னிந்திய சினிமா அதள பாதாளத்தில் உள்ளது. இதனை சரி செய்ய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசரை செய்யப்படும்.
இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது. விகிதாச்சார அடிப்படையில் தான் ஊதியம் என்பதே எங்கள் முடிவு. கமல், அஜித், சிம்பு , சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பி.வி.ஆர் குழுமம் கூட நஷ்டத்தில் தான் இயங்குகிறது. பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்ல படியாக வைத்துக் கொள்ளுங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறக்கும். சிறு படங்கள் எடுப்பவர்கள் கூட கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர்.
ஆனால் பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள். கர்ணன் , ஆயிரத்தில் ஒருவன், கில்லி, சச்சின் போன்ற ஒரு சில படங்கள் தான் ரீ ரிலிசில் சாதித்தன. இப்போதைய நடவடிக்கை மூலம் கூடுதல் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள்." என கூறியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications