மலர்ந்த சிரிப்போடு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரில் பயணித்த ரிதன்யா.. வீடியோ காட்சிகளால் சோகம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27) என்ற பெண்ணுக்கு கவின் குமார் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது திருமணத்தின்போது வரதட்சணையாக 300 பவுன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி செலவில் திருமணம் செய்யப்பட்டது.

500 பவுன் வரதட்சணை தருவதாகச் சொல்லிவிட்டு 300 பவுன் மட்டும் கொடுத்ததாகவும் கவின்குமாருக்கு தொழில் துவங்கி தர வேண்டும் எனவும் மாமனார் மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கவின் குமார் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்ததாலும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பி வைத்துவிட்டு பூச்சி மருந்தை உட்கொண்டு காரில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவின் குமார் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ரா தேவி உடல்நிலை காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் வீட்டு காவலில் உள்ளார்.
இந்நிலையில் ரிதன்யா திருமணத்தின் பொழுது கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரில் அவர் சிரித்தபடி மகிழ்ச்சியாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தின்போது 500 சவரன் நகை தருவதாக கூறிய பெண் வீட்டார், 300 சவரன் அளித்ததாகவும், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் வாங்கிக் கொடுத்ததுடன், இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய 200 சவரன் நகைகளை இன்னும் தரவில்லை எனக்கூறித்தான் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி, அவரது உயிரைக் குடித்துள்ளனர் கணவன் வீட்டார்.












Click it and Unblock the Notifications