திருப்பூர் பூமணி.. அவினாசி ஆண் நண்பருடன் அதிகாலையில்.. விடியற்காலையில் பார்த்ததுமே ஆடிப்போன போலீஸ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ். அவிநாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அறுப்பு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருடன் திருமணத்தை மீறி உறவில் இருந்த பெண்ணான பூமணி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சின்னப்பராஜ் உடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஆண் நண்பரை அவர் என்ன செய்தார் தெரியுமா? விடியற்காலையில் சம்பவத்தை கேள்விப்பட்டு அவினாசி போலீசார் ஆடிப்போனார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் (63). அவிநாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அறுப்பு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். சின்னப்பராஜிற்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அவிநாசியை அடுத்து நடுவச்சேரி பகுதியில் தனியாக வசித்து வரும் கூலித் தொழிலாளியான கூடலூர் பகுதியைச் சேர்ந்த பூமணி (42) என்ற பெண்ணுடன் சின்னப்பராஜிற்கு தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சின்னப்பராஜ் பிற பெண்களுடன் தொடர்பில் இருப்பது குறித்து இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அவிநாசியை அடுத்து சின்னேரிபாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரின் மீது இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த பூமணி தான் கொண்டு வந்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னராஜ் -ன் பின் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால், நிலை தடுமாறிய சின்னப்பராஜின் மீது தான் ஏற்கனவே திட்டமிட்டு கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார். பதற்றம் அடைந்த சின்னப்பராஜ் தப்பி ஓட முயன்ற போது, உடனே அவர் மீது தீ வைத்துள்ளார் பூமணி.
ஏற்கனவே தலையில் பட்ட காயத்தால் நிலை குலைந்த சின்னப்பராஜ் உடலில் தீப்பற்றி பாதி எரிந்த நிலையில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பூமணி தனது வீட்டுக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை அவிநாசி காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, பூமணி சொன்னது உண்மை என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் தகாத உறவில் இருந்த பெண், மர அறுப்பு ஆலை குத்தகைதாரரை தாக்கி எரித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications