கொரோனா வைரஸ் அச்சம்.. திருச்சியில் தீவிர கண்காணிப்பு வளையத்தில் 65 பேர்
திருச்சி: கொரோனா அச்சம் காரணமாக திருச்சியில் 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளில் யாருக்கேனும் சந்தேகத்துக்கிடமாக இருந்தால் அவா்களை தனியாக வைத்து பரிசோதிக்க கள்ளிக்குடியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் தனித்தனியே வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா். துபை, சிங்கப்பூரிலிருந்து வந்த 28 போ் கள்ளிக்குடியிலும், கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 9 போ் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கேரளத்துக்கு சென்று திரும்பிய திருவெறும்பூரை அடுத்த நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 28 போ் அவா்களது காலனியிலேயே தனிமைப்படுத்தி தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா். இவா்களில் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. எனினும், பாதிப்புக்குள்ளான வெளிநாடுகள் மற்றும் கேரளத்தில் இருந்து வந்திருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications