“மனுதர்மத்தை” தடை செய்யுங்க.. திருச்சியில் திடீர் ஆர்ப்பட்டம்! 150 பேர் கைது - ஆ.ராசா சொன்னாரே
திருச்சி: மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அருகில் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செய்து சமூக நீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

திருச்சியில் பெரியார் பிறந்தநாள்
இதேபோல் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து காலை முதலே வழக்கத்திற்கு மாறாக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டது.

மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து அங்கு வந்த மக்கள் அதிகாரம் உட்பட மேலும் சில அமைப்பை சார்ந்தவர்கள் 150 க்கு மேற்பட்டோர் பெரியார் சிலை முன்பாக நின்றுகொண்டு மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மனு தர்மத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி கைது செய்தனர்.

ஆ.ராசா பேச்சு
திமுக எம்பி ஆ.ராசா கடந்த சில நாட்களுக்கு முன் "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்." என மனு தர்மத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதற்கு தடைகோரி போராட்டம் நடைபெற்றுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications