ஹலோ யார்னா இருக்கீங்களா.. திருச்சியா இது... ரோடும் காலி.. கடைகளும் காலி
திருச்சி: திருச்சியில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் கடைவீதிகள் அனைத்தும் கொரோனா அச்சம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
Recommended Video
திருச்சியின் இதயப் பகுதியாகவும், மக்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் உள்ளது மெயின்கார்டு கேட், தெப்பகுளம், மலைக்கோட்டை கடைவீதி, என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, மேலரண்சாலை, கீழரண்சாலை. இங்குதான் எலக்ட்ரானிக் பொருள்கள், ஜவுளி வகைகள், நகைகள், செல்லிடப்பேசி மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோக பொருள்களின் பிரதான சந்தையாக உள்ளது. பெரிய கடைகள் மட்டுமின்றி சாலையோரக் கடைகள், தள்ளு வண்டி கடைகள், கைகளில் பொருள்களை வைத்து வியாபாரம் செய்யும் நபா்கள் என பலரும் உள்ளதால் மக்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி காணப்படும்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கடை வீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக வருவதை தவிர்த்துள்ளனா். கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். இதனால், திருச்சியில் எப்போதும் மக்கள் திரளாகக் காணப்படும் கடை வீதி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுமட்டுமல்லாது, சாலைகளில் வழக்கமாக காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது.

திருச்சி மெயின்கார் கேட் பகுதி மட்டுமல்லாது சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட், பாலக்கரை, உறையூா், கே.கே. நகா், காஜாமலை, சுப்பிரமணியபுரம், மன்னாா்புரம் என மாநகரின் பெரும்பாலான பகுதிகளும் அதன் சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியே காணப்படுகிறது.


-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications