வளர்த்த கடா..ஒரே நேரத்தில் ‘மூன்று குதிரை’யில் சவாரி! அதிமுக அழிக்கும் ஓபிஎஸ்..! பற்றவைத்த பரஞ்சோதி!
திருச்சி : திமுக தலைவர் ஸ்டாலின், சசிகலா, டிடிவியை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் இது எடுபடாது எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
ஒற்றைத் தலைமை தொடர்பாக அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவில் என்ன நடக்கவிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில்அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பொறுப்புகளை வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அவற்றிலிருந்து நீக்கப்படுவார் எனவும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுகவில் பிரச்சினை
மேலும், இடைக்கால பொருளாளராக கேபி முனுசாமி, அல்லது ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனவும், எதிர்கட்சி துணைத் தலைவராக ஒரு சட்டமன்ற உறுப்பினர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போன்ற அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஓ.பி.எஸ். பொருளாளர் பதவியில் நீடிப்பாரா என்பதெல்லாம் பொதுக்குழு எடுக்க வேண்டிய முடிவு எனவும், பொதுக்குழு தொடர்பான ஆலோசனையே தற்போது நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி
இந்நிலையில் திமுக ஸ்டாலின், சசிகலா, டிடிவியை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் இது எடுபடாது என முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி,"திமுக ஆட்சியை கொண்டு வர ஒற்றை தலைமை மீண்டும் தேவை.

எடப்பாடிக்கு ஆதரவு
மாவட்ட செயலாளர்களில் 2 பேர் தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மேலும் இதனை வலியுறுத்தியே பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கோரிக்கையை எழுப்பினர். நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவு உள்ளதை தெளிவாக வெளியாக உள்ளது.

சசிகலாவை நம்பி அரசியல்
ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த தமிழக காவல்துறை தலைவர், பிஜேபி திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார். அவர் ஸ்டாலின், TTV, சசிகலாவை நம்பி அரசியல் செய்கிறார். ஓபிஎஸ்-ன் ஆசை ஒருபோதும் நிறைவேறாது" என கடுமையாக கடுமையாக விமர்சித்துள்ளார். இதே திருச்சி மாவட்ட தெற்கு செயலாளரான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications