"மாமியாருக்கு" பாலியல் தொல்லை.. "சபலிஸ்ட்" கணவனை கண்டு அதிர்ந்த மனைவி.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
குடித்துவிட்டு தகராறு செய்யும் கணவன் மீது சுடுநீரை ஊற்றி கொலை செய்துள்ளார் மனைவி
திருச்சி: மனைவியை சித்ரவதை செய்துவந்ததுடன், மாமியாருக்கும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார் செல்வராஜ்.. கடைசியில் இப்படி ஒரு சோக முடிவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்... மனைவி பெயர் டயானாமேரி.. இவர்களுடன் டயானாவின் அம்மா இன்னாசியம்மாளும் ஒரே வீட்டில் சில காலம் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் குடித்துவிட்டாலே வீட்டில் அட்டகாசம் செய்வாராம்..

மாமியார்
குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சொல்கிறார்கள்.. இதனால் பலமுறை மாமியார், தன்னுடைய மருமகனை கண்டித்துள்ளார்.. மகளிடம் இதை பற்றி சொல்லவும் அவரும், கணவனிடம் தகராறு செய்து, கண்டித்துள்ளார்.. ஆனாலும், செல்வராஜ் திருந்தாமல் இருந்திருக்கிறார்... இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குள் வந்துள்ளார் செல்வராஜ்.. மாமியாருக்கு பாலியல் தொல்லையும் தந்திருக்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன டயானாவும், இன்னாசி அம்மாளும், பொறுமை இழந்ததுடன் செல்வராஜ்ஜை கடுமையாக சத்தம் போட்டனர்..

அடிவயிறு
அப்போதும் செல்வராஜின் சேட்டை அடங்காததால், கிச்சனுக்கு சென்று சுடு தண்ணீரில், மிளகாய்ப் பொடியை கலந்து கொண்டு வந்து 2 பேரும் செல்வராஜ் மீது ஊற்றியுள்ளனர். இதில் செல்வராஜ் உடல் முழுவதும் வெந்துபோய், வலியால் துடிதுடித்தார். அவரது அலறலை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து, செல்வராஜை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்... அங்கு சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.. செல்வராஜ் மீது சுடுநீரை ஊற்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே, இதுகுறித்து திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தரப்பட்டது..

டயானா அட்வைஸ்
விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மனைவி, மாமியார் 2 பேரையுமே விசாரித்து வந்தனர்.. ஆனால், செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்ததால், இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி டயானாவையும், இன்னாசி அம்மாளையும் கைது செய்தனர்.தன் அம்மாவுக்கு பாலியல் தொல்லை தரக்கூடாது என்று செல்வராஜுக்கு பலமுறை டயானா அட்வைஸ் செய்துள்ளாராம்.. ஒவ்வொருமுறையும் பொறுமையாக எடுத்து சொல்லியும் அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த டயானா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம்..

மிரண்ட மாமியார்
அதே பகுதியில்தான், டயானா அம்மா இன்னாசியம்மாள் வீடும் உள்ளது.. 3 மாதமாகவே இங்கேயே தங்கிவிட்டவர், கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லையாம்.. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா ஏற்கவில்லையாம்.. அதனால்தான், சம்பவத்தன்று மனைவியை அழைத்து வர செல்வராஜ் நேரடியாகவே மனைவியை தேடி மாமியார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. டயானாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.. அதற்கு டயானா ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவும், இது இவர்களுக்குள் தகராறாக வெடித்துள்ளது.

கிட்னி காலி
இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், டயானாவை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.. தடுக்க வந்த மாமியாரையும் கடுமையாக தாக்கி உள்ளார்.. இதனால்தான் கோபத்தின் உச்சிக்குச் சென்ற, 2 பேரும் கிச்சனில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து கொண்டுவந்து, கொஞ்சமும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றியுள்ளார்.. மாமியார் இன்னாசியம்மாளுக்கு 43 வயதாகிறது.. டயானாவுக்கு 22 வயதாகிறது.. ஆத்திரத்தில் சுடுநீர் ஊற்றிவிட்டதால், செல்வராஜின் அடிவயிறு பகுதி வெந்து போயுள்ளது. ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்துவிட்டதாம்.. அவரது இறப்புக்கு இதுதான் காரணம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.. இப்போது தாயும் - மகளும் ஜெயிலில் உள்ளனர்..!!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications