“நாங்க வேற மாறி வேற மாறி”, போலீசின் கையை கடித்த அஜித் ரசிகர்கள்..திருச்சியில்“வலிமை” அட்ராசிட்டி..!
திருச்சி : நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்பட வெளியீட்டின்போது திருச்சியில் பட்டாசு வெடித்ததை கண்டித்த காவல்துறையினரை கடித்து வைத்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் நேற்று பக்கா மாஸாக வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பல நாட்களாக தவம் கிடந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பலனாக நேற்று பிரம்மாண்டமாக வலிமை திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் வலிமை
தன்னை தல என அழைக்க வேண்டாம் என அஜித்குமார் கூறினாலும் தல எங்களுக்கு எப்போதும் தல தான் என சொல்லி வெற்றி முழக்கமிட்ட ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே "வேற மாறி" பாடலுக்கு தியேட்டரே குலுங்கியது.

கலவையான விமர்சனம்
இருந்தும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் இரண்டாம் பாதி சென்டிமென்டாக மட்டுமே இருப்பதாகவும் அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என சிலர் பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் படம் வேற லெவல் ஹிட் என அஜித் ரசிகர்கள் பதில் அளித்து வரும் நிலையில் இரண்டாம் நாளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என சில தியேட்டர்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கைது
இந்த நிலையில் திருச்சியில் அஜித் ரசிகர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் பின்னணி விசாரித்தபோதுதான் சிரிப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்றும் வெளியானது. திருச்சி அருகே வலிமை படத்தின்போது வெடி வெடித்ததை தடுத்த போலீஸாரை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட நடிகர் அஜித் நடித்த திரைப்படம் லால்குடியில் உள்ள அன்பு சினிமா தியேட்டரில் நேற்று வெளியானது . இந்த படத்தினை காண அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து உற்சாகத்தின் வெளிப்படையாக சினிமா தியேட்டரில் முன்புறமுள்ள லால்குடி ரயில்வே மேம்பால அனுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர்.

கையை கடித்த ரசிகர்கள்
அப்போது அங்கிருந்த போலீசார் வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தும் மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர். அப்போது அந்த இரு இளைஞர்களும் காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தினர். இதனால் காயம் அடைந்த போலீசார் சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர் டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications