கோவில்பட்டியில் 10 நாளாக பள்ளி செல்லாத சிறுவன்! 1.5 பவுனுடன் மாயம்! மொட்டை மாடியில் அதிர்ச்சி!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் நேற்று மாயமான நிலையில் அவனது வீட்டின் அருகேயுள்ள உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன .

மூத்த மகன் 7 ம் வகுப்பும் இரண்டாவது மகன் 5 ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவருமே அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான் .
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது திடீரென மாயமாகி விட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடினர்.
அப்போது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர், தெரிவித்தனர். இந்த நிலையில் மாயமான சிறுவனின் கழுத்தில் ஒன்றரை பவுனில் செயினும் 1 கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பள்ளி மாணவன் மாயமானது குறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் போலீசார் என தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டில் மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளான்.
இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டார், இதுகுறித்து போலீசாருக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்த சிறுவன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
தொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டு கதறினர்.
மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications