மொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி
கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றுள்ளது
தூத்துக்குடி: மொத்தம் 7 பேரும் ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய் எடுத்து தபதபவென உடம்பில் ஊற்றி கொண்டதை பார்த்ததும் தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸே அலறிவிட்டது... எல்லாத்துக்கும் காரணம் இந்த கந்துவட்டி கொடுமைதான்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்... இவர் மனைவி வேளாங்கண்ணி.
கணேசன் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்.. இந்த கடனை வாங்கி 4 வருஷம் ஆகிறதாம்.. இதுவரை வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளாராம்.

கந்துவட்டி
ஆனால் அதற்கு பிறகும் ஜோசப், கணேசனின் வீட்டு பத்திரத்தை தரவில்லை.. மேலும் வட்டியை கொடு என்று தொடர்ந்து மிரட்டியும் வந்திருக்கிறார்.. இதனால் மனம் உடைந்த கணேசன், ஏரல் ஸ்டேஷனில் இந்த கந்து வட்டி பற்றி புகார் தந்தார்... ஆனால், இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

கோபம்
இதனால் கோபமும், ஆத்திரமும் அடைந்த கணேசன், மனைவி வேளாங்கண்ணி, குழந்தைகளை அழைத்து கொண்டு, நேராக தூத்துக்குடி கலெக்டர் ஆபீசுக்கு வந்தார்.. வந்திருந்த மொத்தம் 7 பேரும் திடீரென கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்களது உடலில் மளமளவென ஊற்றி கொண்டனர்.. பிறகு தீயையும் வைத்து கொளுத்தி கொள்ள போனார்கள்.

7 பேர்
இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உட்பட பொதுமக்கள் அனைவருமே அலறிவிட்டனர். ஓடிவந்து அவர்களை தடுத்து காப்பாற்றினர். இதில் கொடுமை என்னவென்றால், கணேசன், 2 கைக்குழந்தைகளையும் தூக்கி கொண்டு வந்திருந்ததுதான்.. பிறகு 7 பேரையும் மீட்ட போலீஸார் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கந்துவட்டி
இப்படித்தான் 3 வருடத்துக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் ஆபீசில் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. இதற்கு பிறகும் நிறைய தீக்குளிப்பு சம்பவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க ஆரம்பத்தது.

தற்கொலை முயற்சி
இதையடுத்து, யார் மனு தந்தாலும் அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் இனி தற்கொலைக்கு முயல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டாலும் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன.. அத்துடன் கந்துவட்டி பிரச்சனையையும் பெரிய அளவில் தடுத்து நிறுத்த முடியாமலேயே உள்ளது!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications