தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்! மதிமுக நிர்வாகிகளை அதிர வைத்த துரை வைகோ!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் எனக் கூறி ,மதிமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த அவர் அதன் பிறகு பேசும் போது இதனைக் கூறினார்.

உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்றும் மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த நாள் ஞாபகம் வந்ததே அண்ணனே! தமிமுன் அன்சாரியை வாசல் வரை வந்து வழியனுப்பிய வைகோ! அந்த நாள் ஞாபகம் வந்ததே அண்ணனே! தமிமுன் அன்சாரியை வாசல் வரை வந்து வழியனுப்பிய வைகோ!

துரை வைகோ

துரை வைகோ

சமீப நாட்களாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வைகோ ஆக்டிவாக இருந்த போது தென் மாவட்டங்களில் மதிமுக எந்தளவுக்கு எழுச்சியுடன் இருந்ததோ, மீண்டும் அதே எழுச்சியை அடைய வைப்பதற்கான முயற்சியில் துரை வைகோ இறங்கியிருக்கிறார்.

கட்சியினர் அதிர்ச்சி

கட்சியினர் அதிர்ச்சி

இதனிடையே கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த துரை வைகோ, அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் எனக் கூறி கட்சியினரை அதிர வைத்துள்ளார். இது நாள் வரை நமக்காக வைகோ உழைத்தார், இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என துரை வைகோ பேசினார். மேலும், மதிமுகவை வலிமைப்படுத்த பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும் இழந்த செல்வாக்கை மீட்போம் எனவும் நம்பிக்கை பொங்க பேசினார்.

கதவு திறந்துள்ளது

கதவு திறந்துள்ளது

மதிமுகவில் உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் மட்டும் தான் மரியாதை என்றும் கட்சிக்காக உழைப்பவர்களை தவிர மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். துரை வைகோவின் அனல் கட்டும் பேச்சை கேட்டு மதிமுக நிர்வாகிகள் பலரும் அதிர்ந்து போயினர். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் என ஒரே போடாக போட்டார் துரை வைகோ.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

தற்போது தென் மாவட்டங்களில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வரும் துரை வைகோ, விரைவில் தமிழகம் தழுவிய அளவில் மெகா டூர் ஒன்று புறப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வைகோவை பொறுத்தவரை உணர்ச்சிவசப்பட்டு கட்சிக்காரர்களிடம் கோபப்பட்டாலும் கூட அடுத்த சில நிமிடங்களில் தன்னிடம் வசவு வாங்கியவர்களை அழைத்துப் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Durai Vaiko has shaken the MDMK executives by saying that he will not show favoritism like his father.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X