எம்பி தேர்தல்ல தனியா நிற்க முடியுமா? ‘பல்ஸ்’ பார்க்கும் எடப்பாடி! முடிச்சு போடும் முத்துநகர் ‘மாஜி’!
தூத்துக்குடி : மக்களால் ஏற்றுக் கொள்ளபட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அன்று ஒன்று என்றால் அது அதிமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாகவும் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.29 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து திறந்து வைத்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார்.

கடம்பூர் ராஜு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு," கல்வியின் வளர்ச்சிக்காக பள்ளியின் கட்டமைப்பு வசதிக்காக சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை கொண்டு வந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பதும் இல்லை. மதிப்பதில்லை. இது கண்டனத்திற்குரியது. தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறது..

அதிமுக தான்..
மக்களால் ஏற்றுக் கொள்ளபட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அன்று ஒன்று என்றால் அது அதிமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாகவும் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா. தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற சரித்திரத்தை உருவாக்கிய கட்சிதான் அதிமுக. செய்திகளுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சி நாங்கள் இல்லை.

திமுக அரசு
தற்போதைய திமுக அரசு கையாளாகாத அரசு அதிமேதாவிகளை வைத்துக்கொண்டு நிதி வருவாயை பெருக்க எந்த ஒரு கட்டமைப்பு செய்யாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் திமுக அரசு உள்ளது. இந்த அரசின் கையாலாகாத தனம் காரணமாகத்தான் பால் விலை தொழில் வரி மின்கட்டண உயர்வு விரைவில் பல்வேறு கட்டண உயர்வு அறிவிப்பு வர உள்ளது. திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஆணவத்திலே எதிர்க்கட்சியை மட்டும் அல்ல மக்களை ஏளனமாக பேசக்கூடியது கண்கூடாக பார்க்கப்படுகிறது.

40 தொகுதியிலும் வெற்றி
ஓசி பஸ்ஸில் மக்கள் பயணம் செய்கிறார்கள் என்று அமைச்சர் கூறிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த பின்பே தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் அமைச்சர். மக்களைப் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா திட்டம் என்று கொண்டு வந்தார்கள் இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. அதிமுகவில் பிரிவே இல்லை அனைவரும் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக 40 இருக்கும் 40 வெல்வோம் அதற்கு தயாராக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications