Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகிறது.. நவம்பர், டிசம்பரில் நகராட்சி தேர்தல்.. கே.என்.நேரு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், எனவே தற்போது அதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம் கூறினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, சமூக நலன் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

ஆய்வு

இதில் மீளவிட்டான் பகுதியில் உள்ள சி.வா. குளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் இங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து தூத்துக்குடி நகரின் மத்தியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பழைய பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டனர்.

மெதுவாக நடந்தது

மெதுவாக நடந்தது

தொடர்ந்து இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அமைச்சர் கே என் நேரு பணிகளை ஆய்வு செய்தார். விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டேன் . தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டாலும், கடந்த ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால், பணிகள் மெதுவாக நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும்.

விரைவில் நகராட்சி தேர்தல்

விரைவில் நகராட்சி தேர்தல்

இதுபோல் தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் கட்டிட பணிகளை விரைந்து முடிவு முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடைபெறும்.

மாநகராட்சிகள்

மாநகராட்சிகள்

திமுக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சில பகுதியில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சி ஆகும். சில பகுதியில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+