வீட்ட அபகரிச்சுட்டு மிரட்டுறாங்க சார்! தூத்துக்குடி பாஜக நிர்வாகி மீது பெண் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பாஜக பிரமுகரும் அவரது மனைவியும் சேர்ந்து தனது வீட்டை அபகரித்ததுடன் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (52). தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த பாஜக பிரமுகர் மனோகர் நாட்டாமை (49) மற்றும் அவரது மனைவி ஜெயபார்வதி (49) ஆகியோர் மீது மோசடி புகார் கொடுத்து இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு அவசர அவசரமாக பணம் தேவைப்பட்ட காரணத்தால் பாஜக பிரமுகர் மனோகரை சந்தித்து உதவி கோரியதாக தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

வீட்டை கொடுத்தால் ரூ.25 லட்சம் கடன்

வீட்டை கொடுத்தால் ரூ.25 லட்சம் கடன்

அதற்கு மனோகரும் அவரது மனைவி ஜெயபார்வதியும் தனக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறியதாகவும், இதற்காக தனது வீட்டை அவர்கள் பெயரில் எழுதி கேட்டதாகவும், கடனை அடைத்தவுடன் வீட்டை எனது பெயருக்கு எழுதி வைப்பதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீட்டை வைத்து நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.25 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் ராஜேஸ்வரி புகாரளித்துள்ளார்.

பாஜக பிரமுகர் பெயரில் பத்திரப்பதிவு

பாஜக பிரமுகர் பெயரில் பத்திரப்பதிவு

இதனை நம்பி தனக்கு சொந்தமான வீட்டை அவர்களின் பெயருக்கு எழுதிக்கொடுத்தேன் எனக் கூறும் ராஜேஸ்வரி, இதற்காக ரூ.6.5 லட்சம் செலவில் பத்திரப்பதிவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மாதந்தோறும் ரூ.25,000 பணம் செலுத்தியதாகவும் ராஜேஷ்வரி தெரிவித்து உள்ளார்.

கார் வாங்க தொழில் தொடங்கவும் பணம் வசூல்

கார் வாங்க தொழில் தொடங்கவும் பணம் வசூல்

பாஜக பிரமுகர் மனோகர் கார் வாங்குவதற்காக ரூ.1.50 லட்சம் பணமும், புதிய தொழில் தொடங்குவதற்காக ரூ.6 லட்சம் பணமும் வழங்கியதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது பெயரில் மாற்றிக்கொண்ட வீட்டை பாஜக பிரமுகர் மனோகரும் அவரது மனைவியும் மீண்டும் தனக்கு தரவில்லை என்று ராஜேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

உயிருக்கே ஆபத்து

உயிருக்கே ஆபத்து

மேலும் தன்னிடம் பெற்ற இதர தொகைகளையும் கொடுக்க மறுப்பதாகவும் வீட்டையும், பணத்தையும் திருப்பிக் கேட்டதற்காக மனோகர் தன்னை மிரட்டுவதாகவும் புகாரளித்துள்ள ராஜேஸ்வரி, தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+