Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்.. துரோகம் செய்வோரை மன்னிக்கவே மாட்டேன்.. வேலூரில் துரைமுருகன் வேதனை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் ஆனால் எனது இயக்கத்திற்கு (திமுகவிற்கு ) கட்சிக்கு துரோகம் செய்வோரை மன்னிக்க மாட்டேன் என திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன் அதன் விளைவாக சில பாடங்களை கற்றுக்கொண்டேன். அந்த பாடங்களை நான் மறக்க மாட்டேன் என்றும் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் இன்று பேசுகையில், தேர்தல் எப்படி நடக்கும், எப்படி நம்ம கட்சியில் வியூகம் வகுப்பார்கள், எப்படி எதிர்க்கட்சியில் வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நான் ஒவ்வொருரை பற்றியும் இங்கு நன்கு தெரிந்து வைத்துள்ளேன்.. என்னை இனி யாரும் ஏமாற்ற முடியாது. போன முறை நான் ஏமாந்துவிட்டேன். அது கொரோனா காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வெளியில் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் நான் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.

vellore durai murugan dmk

சில துரோகங்களை எனக்கு சிலர் சேர்ந்து நடத்தினார்கள். . ஆனால், அது எனக்கு தெரியும். துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்கூடிய ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு.. என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. நான் யாரையும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்.

என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்திற்கு (திமுக) துரோகம் செய்வோரை நான் மன்னிக்கவே மாட்டேன்..

60- 70 ஆண்டுகள் இந்த கட்சியை நான் வளர்த்தவன் . ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். அதனால் சில பாடங்கள் கற்றுக்கொண்டேன். அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்" இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

vellore durai murugan dmk

துரைமுருகன் பேச்சு ஒரு புறம் எனில், வேலூர் மாவட்டத்தை திமுகவினர் சிலர் திடீரென கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கலகத்தில் இணைந்துள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நேற்று திடீரென குடியாத்தம் பகுதியை சேர்ந்த திமுகவினர் உள்பட பலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், இந்நிலையில் இன்னும் பலர் திமுகவிலிருந்து தவெகவிற்கு வர உள்ளதாக தவெக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+