கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்.. துரோகம் செய்வோரை மன்னிக்கவே மாட்டேன்.. வேலூரில் துரைமுருகன் வேதனை
வேலூர்: என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் ஆனால் எனது இயக்கத்திற்கு (திமுகவிற்கு ) கட்சிக்கு துரோகம் செய்வோரை மன்னிக்க மாட்டேன் என திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன் அதன் விளைவாக சில பாடங்களை கற்றுக்கொண்டேன். அந்த பாடங்களை நான் மறக்க மாட்டேன் என்றும் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் இன்று பேசுகையில், தேர்தல் எப்படி நடக்கும், எப்படி நம்ம கட்சியில் வியூகம் வகுப்பார்கள், எப்படி எதிர்க்கட்சியில் வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நான் ஒவ்வொருரை பற்றியும் இங்கு நன்கு தெரிந்து வைத்துள்ளேன்.. என்னை இனி யாரும் ஏமாற்ற முடியாது. போன முறை நான் ஏமாந்துவிட்டேன். அது கொரோனா காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வெளியில் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் நான் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.

சில துரோகங்களை எனக்கு சிலர் சேர்ந்து நடத்தினார்கள். . ஆனால், அது எனக்கு தெரியும். துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்கூடிய ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு.. என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. நான் யாரையும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்.
என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்திற்கு (திமுக) துரோகம் செய்வோரை நான் மன்னிக்கவே மாட்டேன்..
60- 70 ஆண்டுகள் இந்த கட்சியை நான் வளர்த்தவன் . ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். அதனால் சில பாடங்கள் கற்றுக்கொண்டேன். அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்" இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

துரைமுருகன் பேச்சு ஒரு புறம் எனில், வேலூர் மாவட்டத்தை திமுகவினர் சிலர் திடீரென கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கலகத்தில் இணைந்துள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நேற்று திடீரென குடியாத்தம் பகுதியை சேர்ந்த திமுகவினர் உள்பட பலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், இந்நிலையில் இன்னும் பலர் திமுகவிலிருந்து தவெகவிற்கு வர உள்ளதாக தவெக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறாராம்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications