முதல்வர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கோர்ட் உத்தரவு!
விழுப்புரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாண்பைக் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாக பேசிய வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அக்டோபர் 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications