Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மக்களின் முதல்வர் எடப்பாடி" கோஷம் ஓய்வதற்குள், "ஐயோ, அம்மா அடி" அலறல்! அதிமுக கோஷ்டிக்குள் அடிதடி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்க.." என்ற கோஷம் சாலை முழுக்க எதிரொலிக்க .. திடீரென்று, ஐயோ, அம்மா அடிக்கிறார்களே.. என்ற அலறல் சத்தம் விண்ணைப் பிளந்தது ..

இத்தனை களேபரமும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது அரங்கேறியுள்ளது. வீடியோ காட்சிகளை பார்த்தாலே பதறச் செய்யும் வகையில் அங்கு மோதல் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்..

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்

இப்படித்தான், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்டதில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு காரில் மதுரை, விருதுநகர் வழியாக இன்று பயணம் செய்தார். தென்காசி செல்லும் வழியில் சாத்தூர் நகர எல்லையில் உள்ள வெங்கடாசலபுரம் நான்கு வழிச்சாலையில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இரு கோஷ்டிகள்

இரு கோஷ்டிகள்

அப்போது, அங்கு, முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கோஷ்டியினரும் வந்துள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த ரவிச்சந்திரன் கோஷ்டியினர், துரோகம் செய்து விட்டு இங்கே ஏன் வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது ராஜவர்மன் கோஷ்டிக்கும், ரவிசந்திரன் தரப்பினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.

கம்புகளால் அடிதடி

கம்புகளால் அடிதடி

தோரண கொடிகளை கட்ட கொண்டு வந்த கம்புகளை வைத்து, ஒருவர் மேல் ஒருவர் அடித்தனர். ஐயோ.. அம்மா.. என்ற அலறல் சத்தம் அங்கே எதிரொலித்தது. முன்னதாக எடப்பாடி கார் வந்தபோது, மக்களின் முதல்வர் எடப்பாடி வாழ்க.. என்று ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். சிரித்தபடியே இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

காவல்துறை பாடு கஷ்டம்

காவல்துறை பாடு கஷ்டம்

இதனிடையே, எடப்பாடி சென்றதும், மோதிக் கொண்ட இரு தரப்பினரையும், சாத்தூர் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கோஷ்டி சண்டைக்கு இடையே போலீசார் புகுந்து இரு தரப்பையும் விலக்கி விடுவதற்குள் பெரும் பாடுபட்டனர். இந்த மோதலால் சிறிது நேரம் அந்த இடம் பரபரப்பாக இருந்தது.

 அமமுக வேட்பாளர் ராஜவர்மன்

அமமுக வேட்பாளர் ராஜவர்மன்

சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜவர்மன். சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் கட்சியான அமமுகவிற்கு தாவினார். தனக்கு சீட் தராத பின்னணியில் உள்ள ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். காலையில் அமமுகவில் இணைந்த ராஜவர்மனுக்கு மாலையிலேயே சாத்தூரில் நிற்க டிக்கெட் கொடுத்து மகிழ்வித்தது கட்சி தலைமை. ஆனால் தேர்தலில் ராஜவர்மன் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+