யாரும் தலையிடகூடாது! முதல்வரை சந்தித்து பட்டினபிரவேசம் நடத்தியே தீருவோம்! சடகோப ராமானுஜ ஜீயர் உறுதி
விருதுநகர் : தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்பது குருவை தூக்கி கொண்டாடும் விசயம் , இதில் யாரும் தலையிடக்கூடாது எனவும், கண்டிப்பாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் உறுதிபட கூறியுள்ளார்.
Recommended Video
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பட்டின பிரவேசம் நிகழ்ச்சி
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்பது குருவை தூக்கி கொண்டாடும் விசயம் , இதில் யாரும் தலையிடக்கூடாது எனவும், கண்டிப்பாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் உறுதிபட கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதைச் செய்ய கூடாது அதைச் செய்ய கூடாது என கூற அதிகாரம் இல்லை

சடகோப ராமானுஜ ஜீயர்
பட்டினப்பிரவேசம் சம்பந்தமாக ஆதீனங்கள் மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இதுபோன்று ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது. உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.

யாரும் தலையிடக்கூடாது
குருவை தூக்கி கொண்டாடும் விசயம் இது.இதில் யாரும் தலையிடக்கூடாது கண்டிப்பாக நடத்தியே தீருவோம். செண்டலங்கார ஜீயர் அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது அது அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும்.

கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர்
திமுகவுக்கு அவருடன் இருக்கும் சிலர் கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தோளில் சுமப்பது குறித்த விமர்சனத்திற்கு - கிரிக்கெட் வீரர் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தூக்கிச் சென்று தோளில் சுமக்கிறார்கள். மத விவகாரங்களில் இதைச் செய் அதைச் செய் என யாரும் தலையிட உரிமை கிடையாது" என்று ஜீயர் தெரிவித்தார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications