தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்!
விருதுநகர்: தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்பது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் 14 நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.

அதிகாரிகள் ஆலோசனை
இந்த நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் கொரோனாவை குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஆக்சிஜன் இருப்பு உள்ளது
அதன்பின்னர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார். ஊரடங்கினால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்த கொடூரமான வைரசை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

முதல்வர் முடிவெடுப்பார்
வருகிற 24-ம் தேதிக்குப் பிறகு பாதிப்புகள் குறைந்தால் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகமாக இருந்தால் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக வியாபாரிகள், தினசரி கூலி வேலைக்கு செல்லும் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications