96% விமானங்களில் கொரோனா உள்ளது.. பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் கழிவுநீர் பரிசோதனை முடிவு
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பின் தீவிரம் தற்போது பெரும்பாலும் தணிந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இயல்பு நிலை திரும்பி விட்டது. சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா மட்டும் அச்சுறுத்தி வருகிறது. இதனால்,சர்வதேச அளவில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பயணத்திற்கு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில், கிட்டதட்ட எல்லா சர்வதேச விமானங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. விமானத்தின் கழிவு நீரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
விமானங்களில் இனி மாஸ்க் எல்லாம் அணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த முடிவை முற்றிலும் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஏன் தெரியுமா... அனைத்து விமானங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கிட்டத்தட்ட 96 சதவீத விமானங்களில் பயணிகள் சிலர் கொரோனா பாதிப்புடன் தான் பயணிக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு சூசகமாக கூறுகிறது. இது தொடர்பான தகவலை மலேசியா தேசிய பொது சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

28 விமானங்களில் கொரோனா வைரஸ்
கோலாலம்பூருக்கு வருகை தந்த 29 விமானங்களில் இருந்து கழிவு நீரை எடுத்து பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனையில் முடிவுகள் வெளி வந்த 28 விமானங்களில் இருந்த கழிவு நீரிலும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு விமானத்தில் இருந்து கழிவு நீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனைகள் முடிவு வரவில்லை. இந்த மாதிரிகள் சர்வதேச விமானங்களில் இருந்து கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் எடுக்கப்பட்டுள்ளது.

288 பேருக்கு கொரோனா
அதேபோல், நாட்டில் உள்ள நோய் பாதிப்பு இருந்த 15 இடங்களில் இருந்து வரும் விமானங்களில் இருந்து எடுக்கப்பட 301 மாதிரிகளையும் இதே கால கட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்த பரிசோதனை நடைமுறைகள் நடந்துள்ளன.

சார்ஸ் கோவ் 2 வைரஸ்களின் ஆர்.என்.ஏக்கள்
இதில், கொரோனா பாதிப்பு இருந்த (அறிகுறிகள், அறிகுறிகள் இல்லாமல், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்) நபர்களுடைய மலத்தில் சார்ஸ் கோவ் 2 வைரஸ்களின் ஆர்.என்.ஏக்கள் இருந்துள்ளன. கொரோனா வைரசின் இந்த வடிவம் பிறருக்கு பரவக்கூடியது அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. விமானத்தில் உள்ள கழிவு நீரானது செப்டிக் டேங்கில் இருந்து அதற்கான பிரத்யேக டிரக்குகள் மூலமாக எடுத்துசெல்லப்படுகிறது. அதில் குறிப்பிட்ட விமானங்களை அடையாளம் கண்ட பிறகு அதன் கழிவு நீரில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு லிட்டர் கழிவு நீர் மட்டும்
பரிசோதிக்க வேண்டிய விமானத்தில் இருந்து ஒரு லிட்டர் கழிவு நீர் மட்டும் எடுத்து இந்த பரிசோதனை நடைபெற்றதாக மலேசிய பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் நூர் ஹிஷன் அப்துல்லா தெரிவித்துள்ளார். கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகளை கண்டறிவதற்காக இத்தகைய கொரோனா பரிசோதனைகளை மலேசிய சுகாதாரத்தூறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எந்த நாட்டில் அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கக் கூடிய நோக்கத்தில் இந்த கண்காணிப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக எந்த வேரியண்ட்கள் உள்ளன
கழிவு நீரில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை கவனம் செலுத்தி பார்ப்பதன் மூலம் சமூகத்தில் எந்த அளவு கொரோனா தெளிவாக காணக்கூடிய வகையில் அமையும். விமான நிலையங்களில் பரிசோதனை செய்வது சர்வதேச பயணிகளிடம் எந்த அளவுக்கு வைரஸ் பரவியுள்ளது என்பதையும் புதிதாக எந்த வேரியண்ட்கள் உள்ளன என்பதையும் அறியும் வகையில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications