ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் டாக்டர் சசி தரூர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
15ஆவது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் ஒன்பதாம் நாளில், திருவனந்தபுரம் எம்.பி டாக்டர். ஷஷி தரூர், அரசியல் அமைப்பு மற்றும் உளவுத்துறை குறித்து மோஹித் சத்யானந்துடன் கலந்துரையாடுகிறார்.
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான சசி தரூர், பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைச் சட்டவிரோதமாகக் கண்காணிப்பது குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தவர். அவருடன் சட்ட மற்றும் நீதி அமைப்புகள் குறித்து விரிவாக எழுதி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் சமூக ஊடகங்களை அரசியல் அமைப்புகளை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து எழுதி வரும் புலனாய்வுப் பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.
9 ஆம் நாளின் மற்ற நிகழ்வுகள்
திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா, ஷுனாலி குல்லர் ஷ்ராஃப் உடன் பணிபுரியும் இடம் மற்றும் வழிபாட்டுத் தலம் குறித்துக் கலந்துரையாடுகிறார். மேலும், தனது வாழ்க்கையை வடிவமைத்த படங்கள் குறித்தும் அவர் பேசுகிறார்.
டைகர்ஸ் இன் ரெட் வெதர்: எ க்வெஸ்ட் ஃபார் தி லாஸ்ட் வைல்ட் டைகர்ஸ் என்ற தனது புத்தகத்தின் மூலம் இயற்கை வரலாறு மற்றும் பயண எழுத்துக்களை ஒன்றாக இணைத்த விருது பெற்ற பிரிட்டிஷ் கவிஞர், நாவலாசிரியர், எழுத்தாளர் ரூத் பேடல், "பூமியின் சக்தி" என்ற தலைப்பில் நடைபெறும் விவாதத்தின் ஒரு பகுதியாக இருப்பார். வந்தனா சிங், வனவிலங்கு பாதுகாவலர் நேஹா சின்ஹா உள்ளிட்டோரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்றனர்.
ராகம் என்பது உருவாக்கம், வெளிப்பாடு மற்றும் சுதந்திரத்தின் அழியாத தன்மையை உறுதியளிக்கிறது. ராகங்களின் பழமையான மற்றும் இணையற்ற அமைப்பு, மேம்பாடு மெல்லிசை கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் அவை வரம்பு, சிக்கலான தன்மை, உணர்ச்சி, வெளிப்பாடு மற்றும் உருமாற்றம் ஆகியவற்றை கொண்டும் வளர்க்கிறது. இந்திய கிளாசிக்கல் இசையின் மாஸ்டர்கள் ரகங்கள் குறித்து உரையாடுகின்றனர். வயலின் கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் கல்வியாளர் அம்பி சுப்பிரமணியம்; புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஷேகர் ரவ்ஜியானி, தயாரிப்பாளர் மற்றும் பாடகர், இசையமைப்பாளர் இரட்டையர்களான விஷால்-சேகர்; இசையமைப்பாளர் மற்றும் எழுத்தாளர் அயன் அலி பங்காஷ்; எழுத்தாளர் சாதனா ராவ் அடங்கியோர் அமர்வு ரகங்கள் குறித்து உரையாட உள்ளனர்.
குறிப்பாக மில்லினியலில் மத்தியில் இந்தி மொழி முக்கியமானதாக ஆகிவிட்டது. யூடியூப், பாட்காஸ்ட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற புதிய டிஜிட்டல் மீடியாக்கள் மொழியை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அதன் மூலம் வருவாய் ஈட்டவும் ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலத்தின் கடினமான மொழியாகக் கருதப்பட்ட இந்தி, இப்போது படைப்புகளை வெளிப்படுத்த விரும்பும் மொழியாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணி என்ன? முன்னோக்கிச் செல்லும் வழி என்ன? என்பவை குறித்து எழுத்தாளர்கள் நிஷாந்த் ஜெயின் மற்றும் திவ்யா பிரகாஷ் துபே, எடிட்டர் அதிதி மகேஸ்வரி-கோயல் ஆகியோர் கலந்துரையாட உள்ளனர்.
8ஆம் நாள் நிகழ்வுகள்
இன்று நடந்த ஒரு அமர்வில், எழுத்தாளர் அனிருத் கனிசெட்டி, தனது லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்: சதர்ன் இந்தியா ஃப்ரம் தி சாளுக்கியஸ் டு சோழர்கள் என்ற புத்தகத்தைப் பற்றி மிகவும் பாராட்டப்பட்ட எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான மனு எஸ்.பிள்ளையுடன் விவாதித்தார். இடைக்கால தென்னிந்தியா மற்றும் சமகால அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் அதன் தாக்கம் பற்றிய அனிருத் கனிசெட்டியின் மகத்தான ஆய்வுக்கு இந்த புத்தகம் ஒரு சான்றாகும். இந்த புத்தகம் குறித்து மனு எஸ் பிள்ளை கூறுகையில், "புத்தகம் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது... medieval காலத்தின் பெரிய இடைவெளியை இந்த புத்தகம் நிரப்புகிறது" என்றார். டெக்கன் பிரபுக்கள் மற்றும் மரபுகள் பற்றிய இரு எழுத்தாளர்களும் உற்சாகமாக உரையாடுகின்றனர்.