Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க மூங்கில் செடி வெச்சிருக்கீங்களா? இந்த பொருளை வீட்டில் வைத்தாலே பணமும், மகிழ்ச்சியும் டபுள்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் சில பொருட்களை கட்டாயம் வைத்திருப்பதால், சுபீட்சம் நிறைந்திருக்கும்.. தங்கு தடையின்றி செல்வம் பெருகும் என்பார்கள்.. அந்தவகையில், வாஸ்து சாஸ்திரத்தில் சில முக்கிய பொருட்களை வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அதில் மூங்கில் செடிகள்.

பொதுவாக, நம்மை சுற்றிலும், அல்லது நம்முடைய வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகள், பூக்கள் நிறைந்திருப்பது ஆரோக்கியத்துக்குரியதாகும். நாம் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜனை உற்பத்தி செய்து தந்து, மனித ஆயுளை கூட்டக்கூடிய இந்த தாவரங்களை நாம் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். இதனால், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும்... சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் மீட்டெடுக்கப்படும்.

spirituality vastu tips

இதில் சில தாவரங்களை வீட்டிற்குள்ளேயே வளர்ப்பதால், சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியும் பெருகிவிடும்.. அந்தவகையில், மணிபிளான்ட், தொட்டாசிணுங்கி, துளசி என ஏகப்பட்ட செடிகளை நாம் வீடுகளுக்குள் வளர்க்கலாம்.

ஆக்ஸிஜன்: காற்றிலுள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்து, சுத்தமான ஆக்சிஜனை வெளியிடும் சக்தி மணி பிளாண்ட்களுக்கு உள்ளது. டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்வதால்தான், பல வீடுகளில் ஹாலிலேயே இந்த செடியை வளர்க்கிறார்கள்.

தொட்டால் சிணுங்கி செடிகள், ராகு தோஷத்தை நீக்கிவிடுமாம்.. நீல நிற சங்குப்பூ செடிகள், வீட்டிற்குள் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் கொண்டு வருமாம். கற்றாழை செடிகள் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் அபரிமிதமாக அழைத்து வந்துவிடும். அந்த வகையில் மூங்கில் செடியும் தவிர்க்க முடியாதது. ஏனென்றால், வாஸ்து, ஃபெங் சுயி என்ற சீன சாஸ்திரத்துடன், இந்த மூங்கில் செடிகள் நெருங்கிய தொடர்புடையவை.

மூங்கில் செடிகள்: ஒருவர் மூங்கில் செடிகளை வீட்டில் வளர்த்தால், செல்வமும், ஆரோக்கியமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.. அதுமட்டுமல்லாமல், இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.. எனினும், இந்த மூங்கில் செடியை 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணிக்கையில் வைக்க வேண்டுமாம். அப்போதுதான் செல்வம் வீடுகளில் தங்கும் என்பார்கள்... அதிலும், 21 என்ற எண்ணிக்கையில் திடீர் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டிவிடுமாம்.

மூங்கில் செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டின் கிழக்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.. காரணம், இந்த பகுதிதான், உங்கள் குடும்பத்தின் ஆற்றல் மண்டலமாக செயல்படுகிறது. நேர்மறை ஆற்றலை ஈர்க்க வேண்டுமானால், வீட்டின் வாசலிலேயே வைக்கலாம்.. தென்கிழக்கு இடத்தில் வைத்தால், செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.

உடல் ஆரோக்கியம்: மூங்கில் செடிகள் மங்களகரமானவையாக பார்க்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நிதி நிலை வலுப்பெறும் என்றும் ஆழமாக நம்பப்படுகிறது. இது எல்லாவற்றையும்விட, மாசுகளை சுத்தப்படுத்தும் உயரிய தன்மை இந்த மூங்கில் செடிகளுக்கு இருப்பதால், வீடுகளில் தாராளமாக வளர்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+