Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க..கோடி கோடியாய் பணத்தை ஈர்க்க.. இந்த ஒரு பொருள் போதும்

எதிர்மறை சக்திகளை பச்சை கற்பூரம் தடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். பணத்தை ஈர்க்கும் சக்தி பச்சைக்கற்பூரத்திற்கு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: பணத்தை ஈர்க்கும் சக்தி ஒரு பொருளுக்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணம் காணிக்கையாக கோடி கோடியாக குவியவும் அந்த பொருள்தான் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை சக்திகளை தடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் சக்தியும் அந்த பொருளுக்கு உள்ளதாம். அது என்ன பொருள் அதை எப்படி வீட்டில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பபடுகிறது. இதற்கு தக்க சான்றாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. அங்கு பச்சை கற்பூரம் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் பண மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

அவற்றை சாதாரணமாக பூஜை அறையில் வைத்தாலே நன்மைகள் பல வந்து சேரும். தெய்வீக மனம் கொண்ட ஒரு பொருள் பச்சை கற்பூரம். அவற்றை தீர்த்ததில் கலப்பதால் இல்லம் சுபிட்சம் அடையும். குபேர மூலையில் பச்சைக் கற்பூரம் வைக்கலாம். பச்சைக்கற்பூரம் வாசனையோடு இருக்கும் போது வீட்டிற்குள் பணத்தை ஈர்க்கும்.

 பச்சைக்கற்பூரம்

பச்சைக்கற்பூரம்

நாராயணனுக்கு விருப்பமான பச்சை கற்பூரம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் பணவரவு சரளமாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

குல தெய்வ அருள்

குல தெய்வ அருள்

குலதெய்வ அருள் தருவதற்கு இந்த ஒரு பொருளை தீப எண்ணெயில் சிறிதளவு நுணுக்கி சேர்த்தால் எங்கே இருந்தாலும் உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுடைய வேண்டுதல்களை கேட்டு கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பணம் குறையாது

பணம் குறையாது

பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

பணம் பெருகும் வழி

பணம் பெருகும் வழி

பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

 துர்சக்திகள்

துர்சக்திகள்

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

நிம்மதி பெருகும்

நிம்மதி பெருகும்

இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.

நேர்மறை எண்ணம் அதிகரிக்க

நேர்மறை எண்ணம் அதிகரிக்க

இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.

மகாலட்சுமியின் அம்சம்

மகாலட்சுமியின் அம்சம்

வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். எனவே பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+