பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா.. விமரிசையாக கொண்டாட்டம்.. பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்
தை முதல் நாளில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்து வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறார் என்பது ஐதீகம்.
பரமக்குடி: சூரிய பகவானுக்கு உரிய நாளான இன்று, அனைத்து பெருமாள் கோயில்களிலும் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு வந்து வழிபட்டனர்.
அந்த வகையில், பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ரதசப்தமி விழா கோலாகலமாக நடைபெற்றது.

ரத சப்தமி நாள்
சூரிய ஜெயந்தி நாள் ரத சப்தமி விழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் சூரியனுக்கு உரிய மாதம் ஆகும். இதில், சூரிய பகவானின் ரதத்தில் பூட்டப்பட்ட ஜய, அஜய, விஜய, ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத ஆகிய ஏழு குதிரைகளும் சூரியக் கதிர்கள் செல்லும் பாதைகளை குறிக்கின்றன. அதன்படி, தை முதல் நாளில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்து வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறார் என்பது ஐதீகம்.

எமனேஸ்வரம் பெருமாள் கோயில்
அந்த வகையில், சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒளி தருவார் என்பது நம்பிக்கை. எனவே, இன்று காலை 7 மணிக்கு எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அமர்ந்த திருக்கோலத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நாள் முழுவதும் முக்கிய வீதிகளை வலம் வந்த பெருமாள், பின்னர் கோயிலை அடைந்தார். இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

பரமக்குடி பெருமாள் கோயில்
இரவு, சிறப்பு தீபாரதனைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல, பரமக்குடி சுந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஏகாந்த சேவையில் கல் மண்டபத்தில் காலை 10 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, பெருமாள் புறப்படாகி முக்கிய வீதிகளில் வலம வந்து பின்னர் கோயிலை அடைந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் இன்று ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, ஏழுமலையான காலை முதல் இரவு வரை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications