சங்கடங்களை தீர்க்கும் சங்குப் பூ.. நீல சங்குப்பூ கொடிக்குரிய திசை இதுதான்.. சங்குப்பூக்களின் பலன்கள்
சென்னை: வீட்டில் வறுமை ஒழியவும், பணம் சேரவும், நிம்மதி தங்கவும், மகிழ்ச்சி பொங்கவும், சங்குப்பூக்கள் இருந்தாலே போதும் என்கிறார்கள். அந்தவகையில், வீட்டில் தன வரவு அதிகரிக்க செய்யும் இந்த சங்கு பூவை பற்றி ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியம்சங்கள் என்னென் தெரியுமா?
விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான பூ இதுவாகும்.. எனவே, சங்குப்பூ இருக்குமிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. இந்த பூக்களை மகாவிஷ்ணுவிற்கு சாத்தி வழிபட்டு வரும்போது, குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். நீலம் தவிர, இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களிலும் இந்த பூக்கள் உண்டு.

விஜயதசமி: இந்த சங்குப் பூங்கொடியை வீட்டில் வளர்த்து, அந்த பூக்களை சனி தேவருக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தால், சனி தோஷத்திலிருந்து மெல்ல விடுபட முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. அதேபோல, குடும்பத்தை பீடித்திருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடித்து நேர்மறை ஆற்றலையும் பெருகச்செய்யும் தன்மை இந்த பூக்களுக்கு உண்டு.
விஜயதசமி நாளில் சங்கு மலர்களைக் கொண்டு பரிகாரங்களை செய்யும்போது, அம்பிகையின் ஆசீர்வாதத்தை எளிதாக பெறலாம் என்பார்கள்.. குறிப்பாக, 5 சங்கு மலர்களை தண்ணீரில் போட்டு குளிப்பதால், இதுநாள்வரை தடைபட்ட அனைத்து காரியங்களும் எளிதில் கைகூடும்... விஜயதசமி நாளில், லட்சுமி தேவிக்கு சங்கு பூக்களை பூஜை செய்து, அந்த பூக்களை உங்கள் பர்ஸ் அல்லது பீரோ அல்லது பணம் வைக்குமிடத்தில் வைக்கலாம். இதனால், வீட்டில் பொருளாதாரம் மேலும் வலுவடையும்.
உரிய திசைகள்: அதேபோல, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் 7 சங்கு பூக்களை போட்டு, வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். இதன்மூலமும் குடும்பத்தில் நிலவும் வறுமை, தொல்லை குறைய துவங்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.
இந்த நீல சங்குப்பூ கொடியை, வீட்டில் வடக்கு திசையில் நட்டு வைக்க வேண்டும். இதனால் சுப பலன்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும், இந்த கொடியை மேற்கு அல்லது தெற்கு திசையில் நடக்கூடாது.
செல்வம்: அப்படி வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடை ஏற்படுவதோடு, வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் பாதிக்கப்படும்.. மொத்தத்தில், மணி பிளாண்ட்டிற்கு அடுத்தப்படியாக வீட்டின் செல்வ நிலைமை அதிகரிக்கும் சக்தி இந்த சங்குப்பூவிற்கு உள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications