Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோஷங்களை விலக்கும் வில்வம்! வில்வ இலைகள் தரும் ஆன்மீக பலன்கள்..மகிழ்ச்சியை தரும் வில்வத்தின் சிறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் வில்வ இலைகளின் மகத்துவம் என்னென்ன தெரியுமா? வில்வ இலைகளை எப்போது பறிக்க வேண்டும்? வில்வ இலைகளில் பூஜித்து வருவதால் கிடைக்கக்கூடிய உன்னதமான பெரும்பயன்கள் என்னென்ன தெரியுமா?

ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவமும், மகத்துவமும் உடையது வில்வ மரம்.. காரணம், வில்வ இலைகள் சிவன் என்றும், முட்கள் சக்தி என்றும், அதன் கிளைகள் வேதங்கள் என்றும் போற்றப்படுகின்றன. அதனால்தான் சிவ பூஜைகளில் வில்வ இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

spirituality

வில்வ இலைகள்: வில்வங்களில் 21 வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் மகா வில்வமும், அகண்ட வில்வமும்தான் மிக உயர்ந்த வகைகளாக கருதப்படுகின்றன. அதுமட்டுமல்ல, லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து இந்த வில்வ மரம் தோன்றியதாம். அதனால்தான், யாகங்களில் வில்வ காய்களை பயன்படுத்துவார்கள்.

3 இலை வடிவமானது சிவபெருமானின் மூன்று கண்களை அல்லது திரிசூலத்தை குறிப்பதாகும். அதாவது, முக்கூறுகளைக் கொண்ட 3 இலைகள், திரிசூலத்தின் குறியீடாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

தோஷங்கள்: வில்வ இலைகளை வைத்து பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் குடும்பத்திலிருந்து அகலும்.. பீடித்திருக்கும் தோஷங்களும் விலகும்.. வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்..

ஆனால், பூஜைக்குப் பயன்படுத்துகிறபோது, சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.. அதாவது, சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே இந்த இலையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம்.. ஆனால், சதுர்த்தி அஷ்டமி நவமி சதுர்த்தசி பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது.

வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். 3, 5, 7 இதழ்கள் கொண்ட வில்வங்கள் சிறப்புக்குரியது. ஆனால் எக்காரணம் கொண்டும், சிவபெருமானுக்கு இரட்டை படை எண்ணிக்கையிலான வில்வ இலைகளை அர்பணிக்க கூடாது.

அர்ச்சனை: காய்ந்த நிலையில் இருந்தாலும் வில்வ இலைகளை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மறுபடியும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம்.. இப்படி 5 நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம். வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்திருந்தும் பூஜை செய்யலாம்.

அதிலும், மகா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு வில்வத்தில் பூஜித்து வந்தால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் விலகிவிடுமாம். வீட்டிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.. அப்படி வளர்த்து வருபவர்களுக்கு எம பயம் நெருங்காது என்பார்கள்.. இந்த வில்வ இலைகளால் மாலைகளை கோர்த்து சிவனுக்கு சாற்றலாம். இதனால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+