Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல்: ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு தெரிய வந்த உண்மை.. இனி குணசேகரன் எடுக்கும் முடிவு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் சொத்துகளை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கம்பெனியில் தன்னுடைய ஆட்களை வைத்து குணசேகரனையும் மொத்த குடும்பத்தையும் மிரட்டுகிறார்.

இந்த நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal serial 2023 July 21th special promo Janani came to know about Jeevanandham

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் பெயருக்கு தன்னுடைய சொத்து மாறிவிட்டது என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன் கடும் கோபத்தில் திட்டிக்கொண்டு காரில் வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அப்போதும் கூட நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை எவனோ ஒருத்தன் வந்து உரிமை கொண்டாடுகிறான். இது எந்த வகையில் நியாயம் அவனை சும்மா விடமாட்டேன். யாரு அவன் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

அத்தோடு குணசேகரனுக்கு ஆடிட்டர் மீதும் சந்தேகம் வருகிறது. ஆடிட்டர் கூட இதை இத்தனை நாட்களாக நம்ம கிட்ட சொல்லலையே என்று ஆடிட்டரிடமே கேள்வி கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜனனி இடம் ஈஸ்வரி ஜீவானந்தம் குணசேகரனின் ஆளாகத்தான் இருக்கும் என்று தன்னுடைய சந்தேகங்களை கொளுத்தி போட ஜனனியும், ஜீவானந்தம் குணசேகரன் ஆள் தான் என்று நம்பிக் கொண்டு நான் ஆபீஸில் போய் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆபீஸுக்கு வந்து விடுகிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய சொந்த ஆபிஸில் அங்கிருந்த வேலையாடகளை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு ஜீவானந்தம் அவருடைய அடியாள்களோடு இருப்பதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். அதுவும் எதிர்த்துப் பேசிய கதிரை பர்ஹானா கையைப் பிடித்து முறுக்கி அடித்ததை குணசேகரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் யார் இந்த ஜீவானந்தம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது, வழக்கம்போல குணசேகரனும், ஜனனியும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது. இதில் குணசேகரன், சக்தி, ஞானம், கதிர், நந்தினி என அனைவரும் அமர்ந்திருக்க ஜீவானந்தம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ஜனனி ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் எந்த ரைட்சோட உள்ள வந்து இருக்கீங்க. அப்பத்தாவிடம் கைரேகை எடுத்த தைரியமா? என்று கேள்வி கேட்க, அதற்கு ஜீவானந்தம் நீ தான் அந்த ஜனனியாம்மா என்று கேள்வி கேட்கிறார்.

Ethirneechal serial 2023 July 21th special promo Janani came to know about Jeevanandham

அதற்கு அதிர்ச்சியான ஜனனி மட்டுமல்ல குணசேகரனும் தான். இந்த நிலையில் அங்கே கைகலப்பு ஏற்பட அப்போது ஜீவானந்தம் கையில் இருக்கும் துப்பாக்கியை மேலே நோக்கி சுட்டு, குணசேகரன் உனக்கு பத்து நிமிஷம் டைம் என்று சொல்லி மேலும் சில வார்த்தைகளை பேசுகிறார். இதைக் கேட்டு கதிர் உடைந்து போய்விட, குணசேகரன் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+