சினேகனால் செதுக்கப்பட்ட வரிகள்.. கண்டுகொள்ளாத தேசிய விருது.. ரசிகர்களின் கருத்துக்கள்
சென்னை:2500க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி இருந்தாலும் கவிஞர் சினேகனின் முகமும் பெயரும் சாதாரண மக்கள் மத்தியில் பரிச்சயமானது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.
பிக் பாஸ் முதல் சீசனில் நூலிலையில் வெற்றி வாய்ப்பை இழத்த கவிஞர் சினேகன் எழுத்தாளர்,கவிஞர், பத்திரிக்கையாளர், நடிகர், அரசியல்வாதி, என்று பல முகங்களை கொண்டவர்.தற்போது தேசிய விருது கதவுகளை தட்டிய கவிஞர் சினேகனின் பாடல்கள் குறித்து வரும் செய்திகள் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

வைரமுத்துவின் சிஷ்யன்
சினிமாவில் காதலை கண்ணதாசனுக்கு பிறகு கவிதையாக தந்ததில் கவிஞர் வைரமுத்துக்கு நிகர் எவருமில்லை என்று கூறலாம். அந்த வைரமுத்து பயிற்சி பட்டறை இருந்து வெளிவந்த மாணவன் கவிஞர் சினேகன் ஆவார். கவிப்பேரரசு வைரமுத்து மட்டுமின்றி கவிஞர் வாலியின் தாக்கத்தையும் கலந்து இவரது பாடல்கள் இருக்கும் .காதல், பாசம், நட்பு,என்ற எந்த உணர்வாக இருந்தாலும் வெறும் கவிஞராக மட்டும் இருந்து பாடலை எழுதாமல் கதாபாத்திரமாகவே மாறி பாடலை தந்து உருக வைப்பதில் சினேகன் வேற லெவல்.

தேசிய அளவில் கவனம் பெற்றவை
இவர் பாடல்கள் எழுதியுள்ள பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றன. இவரது பாடல்களும் தேசிய விருது பெரும் அளவிற்கு தரமானதாக இருந்தும் இன்னும் ஏனோ அது எட்டாக்கனியாகவே உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் 'பொய் சொல்ல இந்த மனசுக்கு' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற சினேகன், பாண்டவர் பூமி படத்தில் எழுதிய "அவரவர் வாழ்க்கையில், ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்" "தோழா..தோழா" பாடல்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார்.

கவிஞரின் கைவண்ணம்
ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்று இருந்த "ஞாபகம் வருதே" பாடல்களின் வரிகள் பாடல்களை கேட்போரின் இறந்த காலத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் பசுமையான நினைவுகளை எண்ணி நெகிழ வைத்தது. பருத்திவீரன் படத்திலிருந்து "அய்யய்யோ" பாடல்,ஆடுகளம் படத்தில் "வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா" ,சூரரைப் போற்று படத்தில் இவர் எழுதி இருந்த "காட்டுப் பயலே" போன்ற பாடல்கள் தேசிய விருது பெற்ற படங்களுக்கு இவர் எழுதி இருந்த பாடல்களாகும்.

எதற்கும் சளைத்தவர் இல்லை
இயக்குனர் அமீர் இயக்கத்தில் ராம் படத்திற்கு இவர் எழுதியிருந்த "ஆராரிராரோ.. நான் இங்கு பாட" பாடலுக்கு இணையாக தாய் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் இன்றுவரை வெளிவந்ததில்லை என்றே சொல்லலாம். காதல், பாசம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களில் இறங்கி அடிக்கும் கவிஞர் சினேகன் சாமி படத்தில் இடம்பெற்று இருந்த "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" வில்லு படத்தில் "தீம்தனக்க தில்லானா" போன்ற ரொமாண்டிக் குத்து பாடல்கள் எழுதுவதிலும் சளைத்தவர் இல்லை என்று நிரூபித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications