போட்டியில் இறங்கிய பாவனி...இனி ஆட்டம் வெறித்தனம் தான்..பாவனியின் ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: இதுவரைக்கும் ஜாலியாக பார்த்துக் கொண்டிருந்த பாவனி தற்போது போட்டியில் கலக்க ஆரம்பித்து விட்டார்.
இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
பாவனியின் விளையாட்டை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இனி தான் நிகழ்ச்சியே சூடுபிடிக்க போகிறது என கொஞ்சி வருகின்றனர்.

பிக்பாஸில் கனவுக்கன்னி
சின்னத்திரையின் மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று தெரிந்ததுமே இவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இவர் ஒரு ப்ரோமோவில் வந்தாலே போதும் என்று பலர் கூறிவந்தனர். தற்போது ரசிகர்களின் ஆசையை அதிகமாகவே நிறைவேறிக் கொண்டிருக்கிறது அடிக்கடி ப்ரமோவில் வரவில்லை என்றாலும் எபிசோடுகளில் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.

சின்னத்தம்பியின் நந்தினி
சின்னத்துரை மூலமாக அதுவும் சின்னத்தம்பி சீரியல் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களின் மனதில் நந்தினி ஆக தான் தற்போது வரைக்கும் இவர் வாழ்ந்து வருகிறார். இதற்கு முன்பு இவர் ரெட்டைவால் குருவி எனும் சீரியலில் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், முதல் சீரியலில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை ஆனால் அதற்கு அடுத்து அடுத்து வந்த சீரியல்கள் எல்லாமே இவருக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்ததாக தான் இருந்தது. ஆனால் தற்போது சில காலமாக சீரியலில் இருந்து இவர் ஒதுங்கி இருந்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. எப்போது இவர் மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று பலர் கேட்ட வண்ணமாகவே இருந்தனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
இவர் சினிமாவில் வரவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் அதுவாகவே இருந்துவந்த அதனாலேயே இளைஞர்களையும் தன் வச படுத்திவிட்டார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். பலர் இவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி வைத்துள்ளனர். இந்த நிலையில் இவர் எடுக்கும் ஒவ்வொரு போட்டோசூட் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.

பிக்பாஸில் கலக்கும் ராணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் இவர் அறிமுகமானதும் இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பலருக்கும் பரிச்சயமான இவரை பார்த்து தான் பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்களாம். இந்த நிலையில் தற்போதைய இன்றைய அன்சீன் இவர் போட்டியில் வெற்றி பெறுவதற்காக வருணின் காயினை எடுத்து இருப்பதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் எங்க தலைவி களத்தில் குதித்து விட்டார். இனி வேற லெவல் தான் என்று இவருக்கு எங்கிரேஜ் கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications