புது முல்லை வந்த நேரம்.. பழைய சீரியலை காப்பி அடிக்கலாமா? ஆனாலும் உங்க பிளான் வேற லெவல் தான்!!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது முல்லையாக லாவண்யா அறிமுகம் ஆகி இருக்கிறார்.
புது முல்லை வந்த நேரத்தில் பழைய சீரியலை காப்பியடித்த கதை வரப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு சரவணன் மீனாட்சி சீரியலில் வந்த கதையை இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ரிப்பீட் அடிக்க போகிறார்களாம்.

விலகிய காவியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆயிரம் எபிசோடுகள் தாண்டி ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வெற்றி விழாவை கொண்டாடியது .இந்த நிலையில் கதிர் முல்லை ஜோடி பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் இப்போது ஹோட்டல் வைத்து அதில் லாபத்தை பார்க்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த காவியா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

புது ஐடியா
ஏற்கனவே முல்லை கேரட்டரில் இரண்டு நடிகைகள் நடித்த நிலையில் இப்போது மூன்றாவது நடிகை யாக லாவண்யா களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் சீரியலின் விறுவிறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,கதிரை புதிய போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முல்லை இன்றைய எபிசோட்டில் கெஞ்சி கொண்டிருக்கிறார். இளம் ஜோடிகள் கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொண்டால் அதில் 10 லட்சம் ஜெயிக்கலாம் பணத்தை சீக்கிரமாக ஜெயித்து விட்டால் நாமும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று முல்லை கூறி வருகிறார்.

காலம் காலமாக நடக்கிறது
இதே சீன்களை ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலிலும் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். அதே தான் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் வரப்போகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணன் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி நேரத்தில் வெற்றி பெற்று விடுவார், அதுபோல ராஜா ராணி 2 சீசனில் சரவணன் சந்தியா வழிகாட்டலின்படி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசியில் வெற்றி பெற்று அவருடைய அம்மாவின் கோபத்தை குறைப்பார். அதுபோல இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் நடக்க இருப்பதாக தெரிகிறது.

பழைய கதையா இருக்குமோ
இந்த எபிசோட்டில் முல்லை கதிரிடம் இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவோம் என்று கூறும்போது கதிர் அதற்கு எங்கள் குடும்பத்திற்கு இதுவெல்லாம் செட் ஆகாது நாங்கள் இப்படி எல்லாம் கலந்து கொண்டது கிடையாது என்று கூறி வருகிறார். ஆனாலும் தனக்கு சமையலைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறுகிறார். சமையல் பற்றி தெரியாமல் தான் தற்போது கதிர் ஹோட்டல் நடத்தி வருகிறாரா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். புது முல்லை வந்த நேரத்தில் பழைய சீரியலில் எல்லாம் காப்பி அடித்து சீரியலுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தப் போகிறார்களா ?என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்பது பலருடைய பதிலாக இருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications