சன் டிவியை விட்டு விலகிய பூவரசி.. இப்படி ஒரு காரணமா.. ரசிகர்களுக்கு கூறிய பீலிங் செய்தி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலின் கதாநாயகி திடீரென விலகியுள்ளார்.
பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி ராதிகா பிரீத்தி தன்னுடைய ரசிகர்களுக்கு உருக்கமான செய்திகளை கூறியுள்ளார்.

திடீர் விலகல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் உள்ள கதிர் பூவரசி ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒன்றாக இருந்து வருகிறது. இளம் ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வருவதை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் மீண்டும் கதிர் மற்றும் பூவரசி ஜோடி இணைந்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் திடீர் விலகல் நடைபெற்றிருக்கிறது.

பூவரசி வெளியிட்ட போஸ்ட்
ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் கதிர் கேரக்டரில் நடித்து வந்த அருண் திடீரென்று விலகிவிட்டார். அவருக்கு பதிலாக முகமது அசின் கதிராக தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சீரியலின் கதாநாயகி பூவரசி வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பூவரசி கேரக்டரில் நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமான செய்திகளை ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்ததும் பல ரசிகர்கள் ஏன் இந்த திடீர் முடிவு என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

உருக்கமான வார்த்தைகள்
ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கனத்த இதயத்தோடு பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன். இந்த அற்புதமான வாய்ப்பளித்த சன் டிவிக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது. எனது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் என்னோடு இருப்பீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி என்று கூறியிருக்கிறார்.

சீரியல் வாய்ப்பு
ராதிகா ப்ரீத்தியின் தந்தை ஒரு ராணுவ வீரராம். அதனால் அவரது கல்லூரிக்கு முன்னர் இவர் இரண்டு படங்கள்தான் பார்த்து உள்ளாராம். இந்த படங்கள் அவரை சினிமாவில் நடிக்க ஆர்வத்தை தூண்டவே கல்லூரியில் படிக்கும்போதே போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி உள்ளார். ஒரு கன்னட படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படமும் கம்பெனியும் சரியில்லாததால் அதில் நடிக்காமல் மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்து உள்ளார். அந்த நேரத்தில் தான் இந்த சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது இந்த சீரியலை விட்டு விலகி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவருக்கு மிகுந்த வேதனை இருப்பதாக கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications