தோழியின் திருமண நாளில் தானும் திருமணம் செய்துகொண்ட ஷபானா..ரசிகர்கள் இதை எதிர்பார்க்கலையே
சென்னை: ஷபானா தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமண நாளில் திருமணம் செய்திருக்கிறார்.
அவருடைய ரசிகர்களின் மத்தியில் ஷபானாவின் செயல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்.. ஒடுக்கப்பட்டவர்களை நோக்கி நீளும் ஒளி!
இவர்கள் அனைவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்கள் செய்த செயல்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
எளிமையான திருமணம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே எளிமையாக திருமணத்தை முடித்து இருக்கும் ஷபானா தன்னுடைய தோழியின் திருமண நாளில் நானும் திருமணம் செய்ய வேண்டும் என்று அதே நாளில் முடித்து இருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகி ஷபானா மற்றும் ஜீ தமிழ் கதாநாயகிகளான நட்சத்திரா, சைத்ரா ரெட்டி மற்றும் ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.
தோழிகளின் கூட்டணி
தோழிகள் குரூப்பில் ஏற்கனவே சைத்ரா ரெட்டி காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதுபோல ரேஷ்மாவும் மதனை காதலித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷபானா ஆரியனை காதலித்து நேற்று திருமணம் செய்துகொண்டார். இதில் போன வருடம் இதே நாளில் சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அணியின் முதல் திருமணம் சைத்ரா ரெட்டி தான் செய்திருக்கிறார். இந்த நிலையில் அதே நாளில் ஷபானாவும் திருமணம் செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக ரேஷ்மா திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கொட்டும் மழையில் திருமணம்
சென்னையில் கொட்டும் மழையிலும் எளிமையாக நடந்து முடிந்த ஷபானாவின் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய முதல் திருமண நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார் சைத்ரா ரெட்டி. இவர்கள் இருவருக்கும் அதிகமான தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் சீரியலின் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளமாகவும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்துள்ளனர்.
சீண்டும் ரசிகர்கள்
சென்னையில் ஏற்கனவே கனமழை பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகிறார்கள். ரசிகர்களின் வாழ்த்து மழையில் இவர்களுக்கு ஜலதோஷம் பிடித்து விடக்கூடாது என்று பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒருவழியாக இரண்டாவது வருடத்தில் இரண்டாவது தோழி திருமணம் செய்து கொண்டார். இனி அடுத்தவர்கள் எப்போது என்று சும்மா இருக்கும் ரேஷ்மாவையும், நட்சத்திராவையும் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.